தமிழ்நாடு சீருடைப் பணியில் இரண்டாம் நிலை காவலர் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு


தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுக்குழுமம் அறிவித்துள்ள இரண்டாம் நிலை காவலர் (மாவட்ட மற்றும் மாநகர ஆயுதப்படை- ஆண், பெண் மற்றும் மூன்றாம் பாலினம்) இரண்டாம் நிலை காவலர் (தமிழ்நாடு சிறப்பு காவல்படை- ஆண்) இரண்டாம் நிலை சிறைக் காவலர் (ஆண் மற்றும பெண்) மற்றும் தீயணைப்புத் துறை (ஆண்) ஆகிய பதவிகளுக்கான மொத்தம் 15 ஆயிரத்து 711 காலிப்பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு வரும் 21.5.2017ம் தேதியன்று நடைபெறவுள்ளது.

இதற்கான வயது வரம்பு 1.7.2017 அன்று 18 வயது முதல் 24 வயதுக்குள் இருக்க வேண்டும். பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் வகுப்பினைச் சார்ந்தவர்கள் 18 முதல் 26 வயதிற்குள்ளும், ஆதிதிராவிடர், ஆதி திராவிடர் அருந்ததியர் மற்றும் பழங்குடியினர் வகுப்பினைச் சார்ந்தவர்கள் 18 வயது முதல் 29 வயதிற்கு மேற்படாதவர்களாக இருக்க வேண்டும்.

மேலும், முன்னாள் ராணுவத்தினர், மத்திய துணை ராணுவப் படை வீரர்கள் 45 வயதிற்கு மேற்படாதவர்களாகவும், ஆதரவற்ற விதவைகள் எந்த வகுப்பை சார்ந்தவர்களாக இருந்தாலும் 18 முதல் 35 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். இந்த தேர்விற்கு கல்வித் தகுதி 10-ம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இந்த எழுத்துத் தேர்வுகளுக்கான விண்ணப்பங்கள் தபால் நிலையங்களில் கடந்த ஜனவரி 23ம் தேதி முதல் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும் பிப்ரவரி 22ம் தேதி மாலை 5.45 மணிக்குள் உறுப்பினர் செயலாளர் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக்குழுமம், சென்னை- 8 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

இந்த பணிகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலமாக பிப்ரவரி 1ம் தேதி முதல் தேர்வு வரை இலவச பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது.

இதில் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஒன்றுடன் கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பிக்குமாறு கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Newsletter

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...