மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை தொழில் துறையினரின் எதிர்பார்ப்புகளை ஓரளவு பூர்த்தி செய்திருப்பதாக தொழில் துறையினர் கருத்து


மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை தொழில் துறையினரின் எதிர்பார்ப்புகளை முழுமையாக நிவர்த்தி செய்யவில்லை எனினும், ஒரளவு பூர்த்தி செய்திருப்பதாக தொழில் துறையினர் கருத்து தெரிவித்துள்ளனர்.



2017- 18 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய இந்திய தொழில் வர்த்தக சபையின் முன்னாள் தலைவர் பாலசுந்தரம், பணமதிப்பிழப்பு நடவடிக்கையினால் தொழில் முடக்கம் ஏற்பட்டு இருந்த நிலையில், தொழில் துறையினர் இந்த நிதிநிலை அறிக்கையை ஆவலுடன் எதிர்பார்த்து இருந்ததாக தெரிவித்தார். 

நிதிநிலை அறிக்கை தொழில் துறையினரின் எதிர்பார்ப்புகளை முழுமையாக நிவர்த்தி செய்யவில்லை எனினும், ஓரளவு பூர்த்தி செய்திருப்பதாக அவர் தெரிவித்தார். 

5 இலட்ச ரூபாய்க்கு கீழ் வருமானம் பெறும் தனிநபருக்கு வருமான வரியினை பாதியாக குறைத்து இருப்பதற்கும், சிறு, குறுந்தொழில் முனைவோருக்கு வருமான வரியினை 25 சதவீதமாக குறைத்து இருப்பதற்கும், மறைமுக வரியில் எந்த மாற்றமும் செய்யப்படாதது உள்ளிட்டவற்றிக்கு அவர் வரவேற்பு தெரிவித்தார். 

மேலும் அனைத்து துறைகளுக்கும் அதிக நிதி ஒதுக்கீடு செய்திருப்பது தொழில் மற்றும் பொருளாதாரம் வளர்ச்சி அடைய உதவுமெனவும் கூறிய அவர், மின்னணு பொருளாதாரத்தை ஊக்குவிக்க அறிவிப்புகள் இல்லாதது ஏமாற்றம் அளிப்பதாக தெரிவித்தார். 

மேலும் தமிழகத்திற்கென இந்த பட்ஜெட்டில் இரயில்வே தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என்பது வருத்தமளிப்பதாகவும் அவர் அப்போது தெரிவித்தார்.

இதேபோல செய்தியாளர்களிடம் பேசிய தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கத்தின் தலைவர் செந்தில்குமார், இந்த நிதிநிலை அறிக்கையில் ஜவுளித்துறைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தார். 

மேலும் இந்த நிதி நிலை அறிக்கை நாட்டை வளர்ச்சி பாதைக்கு அழைத்து செல்லும் எனவும், நீண்ட கால அடிப்படையில் தொழில் துறையினருக்கு பயனளிக்கும் எனவும் அவர் தெரிவித்தார். 

கட்டமைப்பு வசதிகள், திறன் மேம்பாடு உள்ளிட்டவற்றிக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாகவும் ஊரக பகுதிகளில் 1 கோடி வீடுகள் கட்டும் திட்டம் பஞ்சாலை தொழிலாளர்களுக்கு பயனளிக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

Newsletter

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...