பாரதியார் பல்கலை.யில் வரலாற்றுக்கு முற்பட்ட தொல்பொருளியல் குறித்து சிறப்பு விரிவுரை நடைபெற்றது


பாரதியார் பல்கலைக் கழகத்தின் வரலாறு மற்றும் சுற்றுலாத் துறையின் சார்பில் வரலாறு சார்ந்த பல்வேறு தலைப்புகளின் கீழ் சிறப்பு விரிவுரைகள் நடத்தத் திட்டமிட்டுள்ளது. இதன் முதற்பகுதியாக வரலாற்றுக்கு முற்பட்ட தொல்பொருளியல் என்ற தலைப்பில் சிறப்பு விரிவுரை வரலாற்றுத் துறையின் முதலாம் ஆண்டு வகுப்பறையில் நடைபெற்றது.



இந்நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக தமிழக அரசின் பழங்குடியினர் ஆய்வு மையத்தின் முன்னாள் இயக்குநரான முனைவர் மகேஸ்வரன் பங்கேற்றார். 

இதில், வரலாற்றுத் துறையின் தலைவர் முனைவர் பூபதி (பொறுப்பு) சிறப்பு விரிவுரையாளரை வரவேற்று உரை நிகழ்த்தி, துறையின் சார்பில் நினைவுப்பரிசு வழங்கி கௌரவித்தார்.

இதைத்தொடர்ந்து மகேஸ்வரன் தனது உரையின் துவக்கத்தில் தொல்பொருளியல் குறித்தும், அத்துறையில் வரலாறு பயிலும் மாணாக்கருக்குள்ள வேலை வாய்ப்புகளைப் பற்றியும் விளக்கினார். 

பின், வரலாற்றுக்கு முற்பட்ட காலம், அதன் பிரிவுகள், அதன் பல்வேறு கூறுகள், அக்கால மக்களின் வாழ்வியல் குறித்து நமக்குக் கிடைத்த சான்றுகள் பற்றி விரிவுரையாற்றினார்.

அதனைத் தொடர்ந்து மாணவ மாணவிகளுக்கு அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பல்வேறு அரும்பொருட்களின் புகைப்படங்களைக் காட்டி, பல தகவல்கள் வழங்கப்பட்டன.

மேலும், மாணவ, மாணவியர் அரும்பொருட்கள் சேகரிப்பில் பங்கேற்று ஓர் அருங்காட்சியகம் அமைக்க முனைவர் மகேஸ்வரன் ஊக்கப்படுத்தினார். 

நிறைவாக வரலாறு மற்றும் சுற்றுலாத்துறையின் விரிவுரையாளரான சங்கீதா நன்றியுரை வழங்கினார்.

Newsletter

“நாங்கள் கட்சிக்காக வாக்கு கேட்கவில்லை; அடுத்த தலைமுறைக்காக வாக்கு கேட்கிறோம்” – கோவையில் சுப. வீரபாண்டியன் விமர்சனம்

கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் செந்தில் பாலாஜியை ஆதரித்து, திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டி...

சிங்காநல்லூர் தொகுதி: மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆவாரம்பாளையத்தில் வாக்கு சேகரிப்பு

சிங்காநல்லூர் தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆதரவாக ஆவாரம்பாளையம் பகுதியில் தீவிர...

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...