கரும்புக்கடை பகுதியில் நூலகம், வங்கி சேவை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டும் : ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பு கோரிக்கை


கோவை உக்கடம் பகுதியை அடுத்து அமைந்துள்ளது கரும்புக்கடை பகுதி. கோவையின் மையப்பகுதியில் அமைந்துள்ள இப்பகுதியில் நூலகம், வங்கிச்சேவை, பூங்கா உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அமைத்து தரக்கோரி  ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

 

இது தொடர்பாக அந்த அமைப்பின் கோவை மாநகர செய்தித்தொடர்பாளர் அப்துல் ஹக்கீம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- 

கரும்புக்கடை பகுதியில் முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். அதில் ஏராளமான பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களும் அடங்குவர். நாடு முழுவதும் வங்கி மயமாக்கப்பட்டுவரும் இந்த நேரத்தில் கரும்புக்கடை பகுதியில் வங்கி வசதி இல்லை. வங்கிச் சேவைகளை பெற டவுன்ஹால், குனியமுத்தூர் அல்லது போத்தனூர் பகுதிக்கு செல்ல வேண்டியுள்ளது. எனவே உடனடியாக இப்பகுதியில் தேசிய மற்றும் அரசுடமையாக்கப்பட்ட வங்கிகள் தொடங்க வழிவகை செய்ய வேண்டும்.

மேலும், கரும்புக்கடை பகுதியை சேர்ந்த பெரும்பாலானோர் நடுத்தர மற்றும் ஏழ்மை வர்கத்தை சார்ந்தவர்களாகவே உள்ளனர். இந்த நிலையில், இங்கு அரசு பள்ளியாக ஒரு தொடக்கப்பள்ளியே உள்ளது. உயர் கல்வி பெற தனியார் கல்வி நிலையங்களை நாடிச்செல்ல தயங்கும் இப்பகுதி மக்களின் படிப்பு பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இங்கு செயல்படும் தொடக்கப்பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும்.

அதே போல் மாணவர்கள் பயன்பெற இங்கு நூலக வசதியும், குழந்தைகளுக்கு பூங்கா வசதியும், பெண்கள் மற்றும் கர்பிணிகளுக்கு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் பிரசவ நிலையமும் அமைத்து தர வேண்டும்.

கோவையின் மையப்பகுதி என்பதால் இப்பகுதியில் எந்த நேரமும் வாகன நெரிசல் ஏற்படுகிறது. பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்களுக்கு போதிய பேருந்து வசதி இல்லை. எனவே காலை மற்றும் மாலை நேரங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட வேண்டும்.

அடிப்படை வசதிகள் மிக குறைவாக இருக்கும் கரும்புக்கடை பகுதியில் போதிய வசதிகளை ஏற்படுத்தித்தர அரசு முன்வர வேண்டும். 

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.





Newsletter

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...