ஆர்.எஸ்.புரம் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் மாதிரி சாலைகளை மாநகராட்சி ஆணையர் (பொ) ஆய்வு


கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம், ஆர்.எஸ்.புரம், டி.பி.ரோடு சாலையில் மாதிரி சாலைகள் அமைப்பதற்கான இடங்களில் முதற்கட்டப் பணிகளான குறியீடு பணிகள் நடைபெற்று வருவதை மாநகராட்சி ஆணையர் (பொ) ப.காந்திமதி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



இதுகுறித்து கோவை மாநகராட்சி ஆணையர் (பொ) ப.காந்திமதி தெரிவிக்கையில் "கோவை மாநகராட்சியில் 6 இடங்களில் மாதிரி சாலைகள் அமைப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. 

ஆர்.எஸ். புரத்தில் டி.பி.சாலை மற்றும் திருவேங்கடசாமி சாலை, திவான் பகதூர் சாலை, சாய்பாபா காலனியில் என்.எஸ்.ஆர் சாலை, ரேஸ் கோர்ஸ் சுற்றுச்சாலை, சங்கனூர் மெயின் ரோடு, மசக்காளிப்பாளையம் மெயின் ரோடு ஆகிய இடங்களில் மாதிரி சாலைகள் அமைப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. 

அதன் தொடர்ச்சியாக ஆரம்பகட்ட செயலாக்கமாக ஆர்.எஸ்புரம் டி.பி.ரோடு சாலை (1.8 கிலோ மீட்டர்) மற்றும் திருவேங்கடசாமி சாலை (1.2 கிலோ மீட்டர்)யில் மாதிரி சாலைகள் அமைப்பதற்கான இடங்களில் முதற்கட்டப் பணிகளான குறியீடு பணிகள் நடைபெற்று வருகிறது. 

இந்த மாதிரி சாலைகள் கண்டுள்ள வாகன நிறுத்தும் இடம், நடைபாதை, சென்டர் மீடியன் ஆகியவை குறியீடு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. 

மேலும், இந்த மாதிரி சாலைகளில் புட் பாத், மின்சார ஒயர்களுக்கான டிரென்ச் மற்றும் டக்ட், பி.எஸ்.என்.எல், தனியார் வடங்கள், வீடுகளுக்கான குடிநீர் பைப், டிராபிக் ரெகுலேசன் தொடர்பான போலீஸ் கேபில் லைன்கள், தெரு விளக்குகள், உயர்மட்ட கோபுர விளக்குகள் ஆகியவை செல்வதற்கான தனியான பொது டக்ட் வாகனங்கள் நிறுத்துவதற்கு தனியாக பார்க்கிங், சிறப்பு நவீன கழிப்பிட வசதி, நவீனமயமான குப்பைத்தொட்டிகள், புதிய மரங்கள் நடுதல், சிறப்பு மாதிரி சாலைகளை ஒட்டி தாய்மார்களுக்கான பாலூட்டும் அறைகள், சிறப்பு மருத்துவ உதவி மையம், ஜியோ டாகிங், ஒய்பை வசதி, வாகனத்தின் வேகங்களை கண்டறியும் கருவி, குடிநீர் வசதி, சுற்றுப்புற மாசு கண்டறியும் கருவி, அனைத்து வசதிகள் கூடிய ஸ்மார்ட் போல்ஸ், சாலைகளை கடக்கும் நடைபாதை வசதி, குறிப்பிட்ட இடவெளியில் மழைநீர் சேகரிக்கும் சிறப்பு ஆழ்துளைக் கிணறு அமைப்பு, அவசர ஊர்தி வாகனங்கள் நிறுத்துவதற்கான தனி இடம் ஆகிய வசதிகள் இந்த மாதிரி சாலைகளில் ஏற்பாடு செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது. 

இதற்கான முதற்கட்டப் பணிகளான மாதிரி சாலைகளான ஆர்.எஸ்புரம் டி.பி.ரோடு மற்றும் திருவேங்கடசாமி சாலைகளில் குறியீடு பணிகள் நடைபெற்று வருவதை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது." இவ்வாறு மாநகராட்சி ஆணையர் (பொ) ப.காந்திமதி தெரிவித்தார். 

இந்த ஆய்வின் போது உதவி நகரமைப்பு அலுவலர் ரவிச்சந்திரன், இளநிலைப் பொறியாளர் தியாகராஜன், ஆலோசகர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.

Newsletter

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...