பொதுத்துறை மருந்து நிறுவனங்களை பாதுகாப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் ஒரு நாள் வேலை நிறுத்தம்

பொதுத்துறை  மருந்து நிறுவனங்கள் பாதுகாப்பு, உயிர் காக்கும் மருத்துவ உபகரணங்களை கட்டுபடுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். 

நோய் தீர்க்கும் மருந்துகளின் விலையேற்றத்தால்  பொதுமக்கள் பயன்படுத்தும் மருந்து பொருட்களின் விலை  பன்மடங்காக உயர்ந்துள்ளதை கட்டுபடுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொருள் மற்றும் சேவை வரியை மருந்துகள் மீது விதிக்கக்கூடாது,அன்னிய முதலீட்டை கட்டுபடுத்துதல், ஆன் லைன் மருத்துவ விற்பனையை தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று ஒரு நாள் தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் வேலை நிறுத்ததில் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்க கோவை மாவட்ட தலைவர் ஜாகீர் ஹுசேன் கூறும்போது, கடந்த 25 ஆண்டுகளாக மருத்துவ துறையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும் சாமானிய மக்களின் நோய் போக்கும் வழிவகை செய்யாமல் கார்பரேட் நிறுவனங்கள் லாபம் சம்பாதிக்கும் வகையில் அரசு செயல்படுவதாக குற்றம் சாட்டினார்.

மேலும், மருத்துவ துறையில் 100 சதவிகித அந்நிய முதலீடு என்பது மருத்துவ துறையில் அடைந்த சுயசார்பை பாதித்து பன்னாட்டு நிறுவனங்களின் தயவில் வாழ வழி செய்துவிடும் என்பதால் மக்களுக்கு சாதகமான மருந்து கொள்கை அளிக்க வேண்டும் என கூறினார்.

Newsletter

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...