தொண்டாமுத்தூரில் கஞ்சா விற்க முயன்ற அசாம் இளைஞர் கைது…!

கோவை தொண்டாமுத்தூர் – பூலுவப்பட்டி சாலையில் ரோந்து பணியின் போது, இளைஞர்களை குறி வைத்து கஞ்சா விற்க முயன்ற அசாம் மாநில இளைஞரை போலீஸார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 1 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.


கோவை: கோவை மாவட்டத்தில் கஞ்சா மற்றும் குட்கா விற்பனை, மற்றும் கடத்தலை தடுக்க தனிப்படை அமைத்து மாநகர மற்றும் மாவட்ட காவல்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில், இன்று தொண்டாமுத்தூர் போலீஸார் தொண்டாமுத்தூர் – பூலுவப்பட்டி சாலையில் ரோந்து பணி மேற்கொண்ட போது, தொண்டாமுத்தூர் அருகே சாலை ஓரத்தில் சந்தேகத்திடமாக நின்றுகொண்டிருந்த வட மாநில இளைஞரை அழைத்து விசாரித்தனர்.

அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால், அவரை போலீஸார் சோதனை செய்தனர். சோதனையில், அவரிடம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், அவர் அசாம் மாநிலத்தை சேர்ந்த ஃபைசுல் இஸ்லாம் (21) என்பதும், கோவையில் தங்கி பணியாற்ற வந்தாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்து அவரை கைது செய்த போலீஸார் அவரிடமிருந்த 1.100 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...

அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் உயர்ந்துள்ளது. ஜூலை 2ஆம...

கோவை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் ஜூலை 2ம் தேதி நிலவரப்படி வெளியாகியுள்ளது. மழைப்பொ...

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...