தொண்டாமுத்தூரில் கஞ்சா விற்க முயன்ற அசாம் இளைஞர் கைது…!

கோவை தொண்டாமுத்தூர் – பூலுவப்பட்டி சாலையில் ரோந்து பணியின் போது, இளைஞர்களை குறி வைத்து கஞ்சா விற்க முயன்ற அசாம் மாநில இளைஞரை போலீஸார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 1 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.


கோவை: கோவை மாவட்டத்தில் கஞ்சா மற்றும் குட்கா விற்பனை, மற்றும் கடத்தலை தடுக்க தனிப்படை அமைத்து மாநகர மற்றும் மாவட்ட காவல்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில், இன்று தொண்டாமுத்தூர் போலீஸார் தொண்டாமுத்தூர் – பூலுவப்பட்டி சாலையில் ரோந்து பணி மேற்கொண்ட போது, தொண்டாமுத்தூர் அருகே சாலை ஓரத்தில் சந்தேகத்திடமாக நின்றுகொண்டிருந்த வட மாநில இளைஞரை அழைத்து விசாரித்தனர்.

அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால், அவரை போலீஸார் சோதனை செய்தனர். சோதனையில், அவரிடம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், அவர் அசாம் மாநிலத்தை சேர்ந்த ஃபைசுல் இஸ்லாம் (21) என்பதும், கோவையில் தங்கி பணியாற்ற வந்தாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்து அவரை கைது செய்த போலீஸார் அவரிடமிருந்த 1.100 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்: பீளமேடு வாணிப கழக அலுவலகத்தில் பரபரப்பு

கோவை பீளமேடு மதுபான கிடங்கு வாணிப கழக அலுவலகத்தில் டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம் ந...

சோமனூர் பேருந்து நிலையம் அருகே மின் கம்பத்தில் தீ விபத்து

கோவை சோமனூர் பேருந்து நிலையம் அருகே ஏப்ரல் 27 மதியம் மின் கம்பத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. மதிய நேரத்தில் மக்கள்...

திருப்பூரில் கட்சித் தலைவர் மீது அவதூறு பரப்பியதாக புகார்

திருப்பூரில் மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமீமுன் அன்சாரி மீது சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாகக் குற்றம் சாட்டி இந்தி...

GCT கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள EVM இயந்திரங்களை கலெக்டர் திடீர் ஆய்வு

கோவை மாவட்டம் 10 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய EVM இயந்திரங்கள் தடாகம் சாலை GCT கல்லூரியில் பாதுகாப்பாக...

கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தை திமுக நிர்வாகிகள் ஆய்வு

கோவை மாவட்டத்தில் 10 தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ண...

கோடையில் ஐஸ்கிரீம் கலப்படம்: உற்பத்தியாளர்கள் மீது தமிழக அரசு தீவிர கண்காணிப்பு

கோடைக்காலத்தில் ஐஸ்கிரீம் மற்றும் குளிர்பானங்களில் கலப்படம் அதிகரித்துள்ள நிலையில், தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறை உ...