கோவையில் நடந்த காவலர் பயிற்சி நிறைவு விழா கூடுதல் காவல் துறை இயக்குநர் பங்கேற்பு…!

பயிற்சி காவலர்களின் நிறைவு அணி வகுப்பு விழா, கோவைப்புதூர் பகுதியில் உள்ள காவலர் பயிற்சி பள்ளி நான்காம் அணி வளாகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில், கூடுதல் காவல் துறை இயக்குனர் சஞ்சய் குமார் கலந்துக் கொண்டார்.


கோவை: தமிழ்நாடு சிறப்பு இரண்டாம் நிலை காவலர் 235 பேர் பயிற்சி காவலர்களின் நிறைவு விழா நேற்று நடைபெற்றது.



நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட, கூடுதல் காவல் துறை இயக்குனர் சஞ்சய் குமார் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.



தொடர்ந்து, காவலர்கள் முன்னிலையில் பேசிய காவல் துறை இயக்குனர் (காவல்துறை நவீன மயமாக்கல்) சஞ்சய் குமார் கூறும் போது:



இன்று பயிற்சி முடிந்து செல்கிறீர்கள் அதோடு பொறுப்பும் அதிகரித்துள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பே ஸ்கார்லாந்து போலீஸுக்கு இணையான போலீஸ், தமிழக போலீஸ் என கூறினர். அவ்வாறு சிறப்பாக செயல்பட்டு வருகிறோம்.

இளங்கன்று பயமறியாது என்ற வார்த்தைக்கிணங்க தைரியமாக செயல்படுங்கள். குடியரசு தலைவரின் சிறந்த காவல் துறைக்கான விருதை தமிழக காவல்துறை பெற்று பெருமை சேர்ந்துள்ளோம். தற்போதைய பயிற்சி முடித்துள்ள உங்களில் 72 பேர் பொறியாளராக இருக்கலாம், 27 பேர் திருமணம் முடித்திருப்பீர்கள், ஏனைய 205 பேர் சில ஆண்டுகளில் திருமணம் முடிக்க இருக்கிறீர்கள். எனவே குடும்பத்தின் மீது உங்களுக்கு பொருப்பு வேண்டும்.

அதே போல் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு உங்கள் பணி குறித்து அறிந்து உங்களது பொறுப்பை அவர்களும் தெரிந்திருக்க வேண்டும்.



போலிஸ் பணி மிக பெருமையான பணி.



இதில், எளிதில் பாராட்டுகள் கிடைக்காது, ஆனால், பணிக்கான மரியாதை உங்களுக்கே தெரியும், என்று விழாவில் பேசினார்.

Newsletter

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...

மின்சார நிலைக் கட்டணம், டிமாண்ட் கட்டணம் குறைக்கப்படும் - திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி உறுதி

கோவையில் தொழில்துறையினர் கலந்துரையாடலில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, தமிழ்நாட்டில் மின்சாரத்துறையில் நிலைக் கட்டணம்...

ஏப்ரல் 23 தேர்தல் அன்று சுற்றுலாத் தலங்கள் மூடப்படும்

ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலின் போது பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் தேர்தல் நடைமுறைகளை கருத்தில் கொண...

தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன் காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை சந்திப்பு

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன், காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை...