கோவை வடவள்ளியில் மகன் இறந்த துக்கத்தில் விஷம் குடித்த தம்பதி - சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்த சோகம்

வடவள்ளி அடுத்த நவாவூர் கணுவாய் ரோடு பகுதியில், விபத்தில் மகன் இறந்த துக்கத்தில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற தம்பதி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



கோவை: கோவை வடவள்ளி அருகே உள்ள நவாவூர் கணுவாய் ரோடு பகுதியை சேர்ந்தவர்கள் சஞ்சீவ்சங்கர் (46) - நந்தினி (45) தம்பதி. இவர்களது மகன் ரவி கிருஷ்ணா கல்லூரியில் படித்து வந்துள்ளார்.

இந்நிலையில் அவர், கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஓணம் பண்டிகையை கொண்டாடுவதற்காக கல்லூரி நண்பர்களுடன் பேரூர் அருகே உள்ள ரிசார்ட்டுக்கு சென்றுள்ளார்.

பின்னர் கொண்டாட்டம் முடிந்து மறுநாள் காலை அங்கிருந்து நண்பர்களுடன் காரில் வீடு திரும்பியுள்ளது. அப்போது, அவர்களது கார் தென்னமநல்லூர் அருகே வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரத்தில் இருந்த கிணற்றுக்குள் பாய்ந்தது. இதில் ரவி கிருஷ்ணா உள்பட 3 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியது.

இந்நிலையில் சஞ்சீவ் சங்கர் - நந்தினி தம்பதியினர் தங்களது ஓரே மகனை பறிகொடுத்த துக்கத்தில் இருந்த இருவரும் கடந்த சில நாட்களாக மிகவும் மனமுடைந்த நிலையில் காணப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே அவர்களுக்கு அக்கம்பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் ஆறுதல் கூறி வந்துனர்.

ஆனாலும் துக்கம் தாக்காமல் இருந்த தம்பதி, விரக்தியடைந்து தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து, 2 நாட்களுக்கு முன்பு இருவரும் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளனர். இதனிடையே செல்போன் அழைப்பை எடுக்காததால், சந்தேகத்தில் நந்தினியின் சகோதரன் அவர்களது வீட்டுக்கு வந்துள்ளார்.

அப்போது இருவரும் வாயில் நுரை தள்ளியபடி உயிருக்கு போராடி கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து அவர்களை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்டு, சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவர்கள் 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் நேற்று காலை நந்தினி சிகிச்சை பலனின்றி இறந்தார். இதையடுத்து சஞ்சீவ் சங்கருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் அவரும் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று மதியம் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் மகன் இறந்த துக்கத்தில் கணவன் - மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

செப்டம்பர் வரை பருத்தி இறக்குமதி வரி ரத்து செய்ய மத்திய அரசுக்கு ஜவுளி துறையினர் கோரிக்கை

பருத்தி விலை தொடர்ந்து உயர்ந்து வரும் சூழலில், தமிழக ஜவுளி தொழில்துறை நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. விவசாயிகளுக்கு பாதிப...

கோவை கண்ணப்பநகரில் அண்ணாமலை தீவிர தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியின் கண்ணப்பநகர் பகுதியில் தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் K.Annamalai, அதிமுக கோவை வடக்...

பாஜக மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி

கோவை வடக்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன், தீவிர பிரச்சாரத்தால் ஏற்பட்ட காலில் வலி மற்று...

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி பொருட்களின் விலை 10 சதவீதம் உயர்த்த 'காஸ்மாபேன்' சங்கம் முடிவு

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி தொழிலில் உற்பத்தி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் பவுண்டரி உற்பத்தி பொருட்க...

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி பொருட்களின் விலை 10 சதவீதம் உயர்த்த 'காஸ்மாபேன்' சங்கம் முடிவு

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி தொழிலில் உற்பத்தி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் பவுண்டரி உற்பத்தி பொருட்க...

தொண்டாமுத்தூர்: திமுக வேட்பாளர் என்.ஆர். கார்த்திகேயன் வெற்றிக்காக கட்சியினர் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் – செந்தில் பாலாஜி

தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற செயல்வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கூட்டத்தில், கூட்டணிக் கட்சிகளின் நிர்வ...