கோவையில் வரும் அக்.28 முதல் ஆவினுக்கு பால் வழங்குவதை நிறுத்த முடிவு - பால் உற்பத்தியாளர்கள் சங்கம் தகவல்

கோவை பால் கொள்முதல் விலை உயர்வு,ஊக்கத்தொகை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் அக்.28 ஆம் தேதி முதல் ஆவினுக்கு வழங்கப்படும் பால் உற்பத்தியை நிறுத்தவுள்ளதாக தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கத்தினர் தெரிவித்தனர்.



கோவை: தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கத்தின் கோவை, திருப்பூர் மாவட்ட உற்பத்தியாளர்களின் ஆலோசனை கூட்டம் கோவை ஒத்தக்கால்மண்டபம் பகுதியில் இன்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் ஆவின் நிறுவனத்திற்கு பால் உற்பத்தி செய்து கொடுத்து வரும் உற்பத்தியாளர்கள் கொள்முதல் விலையை பசும்பாலுக்கு ரூ.42, எருமை பாலுக்கு ரூ.51 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் எனவும் பால் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத் தொகை வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

ஏற்கனவே மாநில நிர்வாகிகள் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், இதுவரை முடிவு எடுக்கப்படாததால், இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 28ஆம் தேதி முதல் கோவை மாவட்டத்தில் ஆவினுக்கு வழங்கப்படும் பால் விநியோகத்தை நிறுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

தனியார் பால் நிறுவனங்கள் அதிக விலைக்கு பால் கொள்முதல் செய்து வருவதால் பெரும்பாலான உற்பத்தியாளர்கள் தனியார் நிறுவனத்திற்கு பாலை விற்பனை செய்து வருகின்றனர். ஆவின் நிறுவனம் விலையை உயர்த்தாததால் மேலும் சிலரும் தனியார் நிறுவனங்களுக்கு கொடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே அரசு உரிய நடவடிக்கை எடுத்து பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

Newsletter

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...