கோவையில் 103 பேருக்கு பணி ஆணை வழங்கிய மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி

நாடு முழுவதும் 10 லட்சம் பேருக்கு அரசு பணி வழங்கும் நிகழ்வை பிரதமர் மோடி தொடங்கி வைத்த நிலையில், கோவையில் 103 பேருக்கான பணி ஆணையை மத்திய இணையமைச்சர் வழங்கினார்.


கோவை: நாடு முழுவதும் 10 லட்சம் இளைஞர்களுக்கு அரசுப் பணி வழங்கும் வேலைவாய்ப்பு நிகழ்வை பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சி இந்தியா முழுவதும் உள்ள சுமார் 115 நகரங்களில் நடைபெற்றது.

இதில் முதற்கட்டமாக மத்திய அரசின் பல்வேறு துறைகளில் புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட 75 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.



கோவை மாவட்டத்தில் இந்த நிகழ்ச்சி பீளமேட்டில் உள்ள பி.எஸ்.ஜி கல்லூரி வளாக அரங்கில் நடைபெற்றது. இதில் மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இந்த நிகழ்வில் பல்வேறு வங்கிகள் மற்றும் மத்திய அரசுத் துறைகளில் பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 103 இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கப்பட்டன.



இந்த நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.,க்கள் வானதி சீனிவாசன், சரஸ்வதி. தபால்துறை போஸ்மாஸ்டர் ஜெனரல் ஸ்மிதா அயோத்யா, தமிழக சர்கிள் முதன்மை போஸ்ட் மாஸ்டர் செல்வகுமார் ஆகியோரும் கலந்து கொண்டு பணி நியமன ஆணைகளை வழங்கினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...