மேட்டுப்பாளையம் குற்றவியல் நடுவர்மன்ற நீதிபதி நூதன நிபந்தனைகளுடன் மாணவர்களுக்கு ஜாமீன் வழங்கினார்.

கோவை மாவட்டம் காரமடையில் தகராறு செய்ததாக கைது செய்யப்பட்ட மாணவர்களுக்கு தினமும் 10 குறள்கள் வீதம் 10 நாட்களுக்கு 100 குறள்கள் படிக்க வேண்டும் என்ற நூதன நிபந்தனைகளுடன் நீதிபதி சுரேஷ்குமார் ஜாமீன் வழங்கினார்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே கடந்த 31ம் தேதி சாலையோரத்தில் சவுண்டமுத்து என்பவரிடம் குடிபோதையில் தகராறில் ஈடுபட்டதாக தனியார்கல்லூரி மாணவர்கள் (ஹரி, மணிகண்டன், முத்து) ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் கைதான மாணவர்கள் சார்பில் மேட்டுப்பாளையம்நடுவர் நீதிமன்றத்தில் இன்று ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்த மனுவினை விசாரித்த மேட்டுப்பாளையம் குற்றவியல் நடுவர்மன்ற நீதிபதி சுரேஷ்குமார், மாணவர்கள் மூன்று பேருக்கும் நூதன நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கினார். தனியார் கல்லூர் மாணவர்கள் மூவரும் தினமும் 10 குறள்கள் வீதம் 100 குறள்களை அதற்குரிய விளக்கத்துடன் மனப்பாடம் செய்து, மேட்டுப்பாளையம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தமிழ் ஆசிரியரிடம் ஒப்புவிக்க வேண்டும் எனவும் இதை பள்ளியின் தலைமை ஆசிரியர் உறுதி செய்து நீதிமன்றத்தில் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்க வேண்டும் எனவும்மேட்டுப்பாளையம் குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதி சுரேஷ் குமார் தனது உத்திரவில்  தெரிவித்துள்ளார்.

Newsletter

அன்னூர் அருகே 147 மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த முதியவர் கைது.

கோவை மாவட்டம் அன்னூர் அருகே அனுமதியின்றி மது விற்பனைக்காக 147 மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்த 62 வயது முதியவரை போலீச...

கோவையில் மீன் பிடிக்கச் சென்ற 13 வயது மாணவன் கொலை; சக மாணவர்கள் 2 பேர் கைது

கோவை இருகூர் அருகே வாய்க்காலில் மீன் பிடிக்கச் சென்ற 7ஆம் வகுப்பு மாணவன், சக மாணவர்களால் மதுபாட்டிலால் தாக்கிக் கொலை செய...

Sri Ramakrishna மருத்துவமனையின் இரண்டு நாள் சுகாதார விழிப்புணர்வு கண்காட்சி Brookfield மாலில் தொடக்கம்

உலக ஆஸ்துமா தினம் மற்றும் உலக செரிமான ஆரோக்கிய தினத்தை முன்னிட்டு, Coimbatore Sri Ramakrishna மருத்துவமனை சார்பில் Brook...

“டாஸ்மாக் கடையை மூடுங்கள்” – கோவையில் பெண்கள், குழந்தைகள் திடீர் முற்றுகை போராட்டம்

கோவை: இருகூரில் இருந்து அத்தப்பகவுண்டன்புதூர் செல்லும் சாலையில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுக்கடையை மூட வலியுறுத்தி 50-...

“நான் தான் எல்லாம்” எண்ணத்தில் எடப்பாடி செயல்படுகிறார்: செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமியின் தற்போதைய நிலைப்பாடுகள் எம்....

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...