வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.59 லட்சம் மோசடி - கோவை தம்பதியினர் கேரளாவில் கைது

கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.59 லட்சம் மோசடி செய்து தலைமறைவாக இருந்த கோவை தம்பதியினர் கேரளா மாநிலம் கண்ணூர் பேருந்து நிலையத்தில் கைது.


கோவை: கோவையை சேர்ந்த தன்யா மற்றும் கருணாநிதி தம்பதிகள் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் வேலை வாங்கி தருவதாக கூறி பல பேரிடம் ரூ.59 லட்சம் வரை பெற்று மோசடி செய்துள்ளனர்.

இதனால் பணம் இழந்தவர்கள் கடந்த 5 மாதங்களுக்கு முன் கொடுக்கபட்ட புகார் தொடர்பாக வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த இருவரையும் போலீசார் தேடி வந்தனர்.

விசாரணையில் அவர்கள் மீது கேரளா எர்ணாகுளம் காவல் நிலையம், மதுரை மாவட்டம், மற்றும் கோவையிலும் அவர்கள் பெயரில் மோசடி வழக்கு நிலுவையில் இருந்தது வந்தது.

மாநகர காவல் ஆணையாளர் உத்தரவின் படி தனிப்படை அமைத்து இவர்களை தேடி வந்தனர். இந்நிலையில் கேரளா மாநிலம் கண்ணூர் பேருந்து நிலையத்தில் இருந்து வேறு ஊருக்கு தப்பிச் செல்ல முயன்ற இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

கோவை அழைத்து வந்த போலீசார் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...