இருளுடன்‌ போராட வேண்டாம்‌; ஒளி வந்தால்‌ இருள்‌ தானாக நீஈ்கிவிடும்‌ - சத்குரு ஜக்கி வாசுதேவ் அறிக்கை

தீபாவளி பண்டிகையையொட்டி ஈஷா யோகா மைய நிறுவனர், சத்குரு ஜக்கி வாசுதேவ் அறிக்கையின் மூலம் பொதுமக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.


கோவை: இருள்‌ என்னும்‌ அறியாமையுடன்‌ போராட வேண்டாம் தெளிவு என்னும்‌ ஓளியை ஏற்றினால்‌ அறியாமை என்னும் இருள்‌ தானாக மறைந்துவிடும்‌ என ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

தீபாவளி பண்டிகையையொட்டி பொதுமக்களுக்கு சத்குரு ஜக்கி வாசுதேவ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி அறிக்கையில், கலாச்சார நீதியாக தீபாவளி தினமானது நரகாசூரனை கிருஷ்ணர்‌ வதம்‌ செய்த தினமாகவும்‌, வனவாசம்‌ முடித்து அயோத்தியாவிற்கு திரும்பிய ராமரை மக்கள்‌ தபங்களுடன்‌ வரவேற்ற தினமாகவும்‌ கொண்டாடப்படுகிறது.

அடிப்படையில்‌, இந்நாள்‌ அறியாமையை வீழ்த்தி தெளிவு என்னும்‌ வெற்றியை பெறும்‌ சாத்தியத்தை குறிக்கும்‌ நாளாகும்‌. தபம்‌ என்றால்‌ வெளிச்சம்‌. பொதுவாக வெளிச்சம்‌ தெளிவோடும்‌, இருள்‌ அறியாமையோடும்‌ ஒப்பிடப்படுகிறது.

இருள்‌ என்பது வெளியில்‌ இருந்தாலும்‌, நமக்குள்‌ இருந்தாலும்‌ நம்‌ கண்‌ முன்‌ இருப்பதே நமக்கு புரியாது. தீபாவளி என்பது வெறும்‌ வீட்டில்‌ விளக்கேற்றும்‌ தினம்‌ கிடையாது. நமக்குள்ளும்‌ விளக்கு ஏற்ற வேண்டும்‌.

வீட்டில்‌ விளக்கு ஏற்றுவதற்கு சில குறிப்பிட்ட காரணங்கள்‌ இருககிறது. மின்‌ விளக்குகள்‌ இல்லாத காலத்தில்‌ எண்ணெய்‌ விளக்கு என்பது மிகவும்‌ முக்கியமான விஷயமாக இருந்தது.

அப்போது சூரியன்‌ மறைந்த பிறகு விளக்கின்‌ தேவை அத்தியாவசியமானதாக இருந்தது. அதன்‌ முக்கியத்துவத்தை நீங்கள்‌ உணர வேண்டுமென்றால்‌, தீபாவளி நாளன்று மின்‌ விளக்குகளுக்கு பதிலாக எண்ணெய்‌ விளக்குகளை வீட்டில்‌ ஏற்றுங்கள்‌.

அப்படி செய்தால்‌, அதன்‌ தாக்கத்தையும்‌ ஆனந்தத்தையும்‌ நீங்கள்‌ உணர்வீர்கள்‌. அது வீட்டின்‌ சூழ்நிலையையே மாற்றிவிடும்‌. பூஜை அறையில்‌ தினமும்‌ எண்ணெய்‌ விளக்குகளை ஏற்றினால்‌, உங்கள்‌ ஆரோக்கியமும்‌ மேம்படும்‌.

வெளியில்‌ மட்டுமின்றி உங்களுக்கு உள்ளும்‌ வெளிச்சம்‌ வரவேண்டும்‌. உங்களுக்குள்‌ தெளிவை ஏற்படுத்த ஈஷாவின்‌ மூலம்‌ பல யோக கருவிகளை நாங்கள்‌ இலவசமாக வழங்குகிறோம்‌. அதனை நீங்கள்‌ பயன்படுதீதி கொள்ளலாம்‌.

அறியாமை என்னும்‌ இருளை நீக்குவதற்கு அதனுடன்‌ நீங்கள்‌ போராட கூடாது. இருள்‌ நிறைந்த ஒரு இடத்தில்‌ ஒரு ஒளி விளக்கை ஏற்றினால்‌, இருள்‌ காணாமல்‌ போய்விடும்‌.

அதேபோல்‌, தெளிவு பிறந்தால்‌ அறியாமை இல்லாமல்‌ போய்விடும்‌. இந்த தீபாவளி திருநாள்‌ உங்கள்‌ வாழ்வில்‌ ஒரு மகத்தான நாளாக இருக்க வேண்டும்‌ என்னுடைய ஆசை, என்னுடைய அருள்‌.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கரூரில் வாக்களிக்காத செந்தில் பாலாஜி; அதிமுகவினர் விமர்சனம்

சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதி வேட்பாளரும் கோவை திமுக தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி தனது சொந்த ஊரான கரூர...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

கோவை வாக்கு எண்ணிக்கை மையத்தில் 300 CCTV கேமராக்கள் மூலம் மூன்றடுக்கு பாதுகாப்பு

கோவை மாவட்டத்தில் 84.67 சதவீத வாக்குப்பதிவுக்குப் பிறகு, 10 சட்டமன்ற தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அரசு தொழில்ந...

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...