கேரளா சிறையில் உள்ள இலங்கை முகமது அசாருதினை சந்தித்தாரா ஜமேசா முபின்?

2019 ஆம் ஆண்டு இலங்கை தேவாலய குண்டு வெடிப்பு சம்பவத்தின் அடிப்படையில் கைதான மூன்று நபர்களில் ஒருவர் முகமது அசாருதீன். கேரள சிறையில் உள்ள இவரை, கோவை கார் சிலிண்டர் வெடிப்பில் இறந்த ஜமேசா சிறையில் சந்தித்தாரா என்ற கோணத்தில் வருகை பதிவேட்டை கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது.


கோவை: 2019 ஆம் ஆண்டு இலங்கை தேவாலய குண்டு வெடிப்பு சம்பவத்தின் அடிப்படையில் கைதான மூன்று நபர்களில் ஒருவர் முகமது அசாருதீன். இவர் கேரளா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை கோவை உக்கடம் பகுதியில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு காரில் சிலிண்டர் வெடித்த சம்பவத்தில் இறந்த ஜமேசா முபின் என்பவர், அசாருதினை கேரள சிறையில் சந்தித்தாரா? என்ற அடிப்படையில், சிறையில் உள்ள வருகை பதிவேட்டில் முபின் கையெழுத்துட்டாரா என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், வழக்கில் பல்வேறு திருப்பங்கள் ஏற்பட்டு வரும் நிலையில், ஆறு தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணையானது மேற்கொண்டு வந்த நிலையில், தற்போது கூடுதலாக மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு, மொத்தம் ஒன்பது தனிப்படையினர் வழக்கை பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

இதுவரை 22 நபர்களை தனிப்படை போலீசார் விசாரணைக்கு உட்படுத்தியுள்ள நிலையில், முகமது தல்கா (25) உக்கடம், முகமது அசாருதீன் (23) உக்கடம், முகமது ரியாஸ் (27) G.M.நகர், ஃபிரோஸ் இஸ்மாயில் (27) G.M.நகர், முகமது நவாஸ் இஸ்மாயில் (26) G.M.நகர் என ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

2019 ல் கைதான முகமது அசாருதினிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்த வாய்ப்பிருக்கின்றன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், ஜமேஷாவிற்கு கார் தந்து உதவிய நபர் யார்? அவர் பின்னணி என்ன? அவர் ஏதேனும் அமைப்பில் இருக்கின்றாரா? என்ற தகவல்களை போலீசார் சேகரித்து வருகின்றனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி இந்திய அளவில் 7வது இடம் பெற்று சாதனை

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, EducationWorld தேசிய தரவரிசையில் இந்திய அளவில் 7வது இடத்தையு...

டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்: பீளமேடு வாணிப கழக அலுவலகத்தில் பரபரப்பு

கோவை பீளமேடு மதுபான கிடங்கு வாணிப கழக அலுவலகத்தில் டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம் ந...

சோமனூர் பேருந்து நிலையம் அருகே மின் கம்பத்தில் தீ விபத்து

கோவை சோமனூர் பேருந்து நிலையம் அருகே ஏப்ரல் 27 மதியம் மின் கம்பத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. மதிய நேரத்தில் மக்கள்...

திருப்பூரில் கட்சித் தலைவர் மீது அவதூறு பரப்பியதாக புகார்

திருப்பூரில் மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமீமுன் அன்சாரி மீது சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாகக் குற்றம் சாட்டி இந்தி...

GCT கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள EVM இயந்திரங்களை கலெக்டர் திடீர் ஆய்வு

கோவை மாவட்டம் 10 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய EVM இயந்திரங்கள் தடாகம் சாலை GCT கல்லூரியில் பாதுகாப்பாக...

கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தை திமுக நிர்வாகிகள் ஆய்வு

கோவை மாவட்டத்தில் 10 தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ண...