தேசிய கல்வி உதவித்தொகைக்காக ஆன்லைனில் விண்ணப்பிக்க அக்.31 கடைசி நாள் - மத்திய மனிதவள மேம்பாட்டு துறை

பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள், 8ஆம் வகுப்புக்கு மேல் தங்கள் படிப்பை தொடர தேசிய கல்வி உதவித்தொகையை பெறுவதற்கான தேர்வில் பங்கேற்க ஆன்லைனில் விண்ணப்பிக்க அக்டோபர் 31ஆம் கடைசி நாள் என அறிவிப்பு


டெல்லி: தேசிய வருவாய் மற்றும் தகுதியுடன் கூடிய கல்வி உதவித் திட்டத்தின் கீழ் படிப்பில் சிறந்து விளங்கும், பொருளாதாரத்தில் பின்தங்கிய, 8 ஆம் வகுப்புடன் பள்ளிப் படிப்பை நிறுத்திய மாணவர்கள் தொடர்ந்து தங்கள் கல்வியை தொடர்வதற்கு உதவித் தொகை வழங்கப்படுகிறது.

இந்நிலையில், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை சார்பில், ஆண்டுதோறும் 1 லட்சம் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆண்டுக்கு 12,000 ரூபாய் வழங்கப்படுகிறது. தேசிய கல்வி உதவித் தொகை நேரடியாக மாணவர்களின் வங்கிக் கணக்கிற்கு அனுப்பப்படுகிறது.

இந்நிலையில், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,

தேசிய வருவாய் மற்றும் தகுதியுடன் கூடிய கல்வி உதவித் திட்டத்தின் கீழ் 2022-2023 ஆம் ஆண்டிற்காக விண்ணப்பிப்பதற்கு இம்மாதம் 31ஆம் தேதி கடைசி நாளாகும்.

விண்ணப்பிக்கும் மாணவரின் பெற்றோர்களுடைய ஆண்டு வருமானம் 3 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மிகாமல் இருக்க வேண்டும்.

தேசிய உதவித் தொகைக்கான தேர்வில் 55 சதவீத மதிப்பெண்கள் அல்லது 7ஆம் வகுப்பு தேர்வில் 55 சதவீத மதிப்பெண்களை மாணவர்கள் பெற்றிருக்க வேண்டும். மேலும் பட்டியலின மாணவர்களுக்கு மதிப்பெண் சலுகை அளிக்கப்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...