கோவை விமான நிலையத்தில் பயணி தவறவிட்ட தங்க நகையை அதிகாரியிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு குவியும் பாராட்டு

கோவை விமான நிலையம் அருகே பயணிகளை இறக்கிவிட்டு சென்ற ஆட்டோ ஓட்டுனர் ரபிக், கீழே கிடந்த 3சவரன் தங்க நகையை எடுத்து விமான நிலைய அதிகாரிகளிடம் ஒப்படைத்த நிலையில், ஆட்டோ ஓட்டுனருக்கு அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.


கோவை: கோவையை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் ரபிக். இவர் பயணிகளை ஏற்றிக் கொண்டு கோவை விமான நிலையம் சென்றுள்ளார். அங்கு அவர்களை இறக்கி விட்டு விட்டு விமான நிலையத்திலிருந்து வெளியே வந்து கொண்டிருந்தார்.

அப்பொழுது அவர் கண்ணில் மூன்று சவரன் மதிக்கத்தக்க தங்கச் செயின் தரையில் கிடப்பது தெரிய வந்தது. உடனடியாக அதை எடுத்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்களிடம் இந்த தங்கச்செயின் யாருடையது என விசாரித்துள்ளார்.

அப்பொழுது யாரும் அதற்கு உரிமை கூறாததால், அந்த தங்க நகையை விமான நிலைய அதிகாரியிடம் ஒப்படைத்துள்ளார். இந்நிலையில், நேர்மையாக செயல்பட்ட ஆட்டோ ஓட்டுனரை விமான நிலைய உயர் அதிகாரிகள் பாராட்டினர்.

Newsletter

கோவை ரயில் நிலையம் அருகே 1.4 கிலோ கஞ்சாவுடன் பீகார் நபர் கைது.

கோவை மத்திய ரயில் நிலையம் அருகே விநாயகர் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ரேஸ் கோர...

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...