கோவை விமான நிலையத்தில் பயணி தவறவிட்ட தங்க நகையை அதிகாரியிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு குவியும் பாராட்டு

கோவை விமான நிலையம் அருகே பயணிகளை இறக்கிவிட்டு சென்ற ஆட்டோ ஓட்டுனர் ரபிக், கீழே கிடந்த 3சவரன் தங்க நகையை எடுத்து விமான நிலைய அதிகாரிகளிடம் ஒப்படைத்த நிலையில், ஆட்டோ ஓட்டுனருக்கு அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.


கோவை: கோவையை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் ரபிக். இவர் பயணிகளை ஏற்றிக் கொண்டு கோவை விமான நிலையம் சென்றுள்ளார். அங்கு அவர்களை இறக்கி விட்டு விட்டு விமான நிலையத்திலிருந்து வெளியே வந்து கொண்டிருந்தார்.

அப்பொழுது அவர் கண்ணில் மூன்று சவரன் மதிக்கத்தக்க தங்கச் செயின் தரையில் கிடப்பது தெரிய வந்தது. உடனடியாக அதை எடுத்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்களிடம் இந்த தங்கச்செயின் யாருடையது என விசாரித்துள்ளார்.

அப்பொழுது யாரும் அதற்கு உரிமை கூறாததால், அந்த தங்க நகையை விமான நிலைய அதிகாரியிடம் ஒப்படைத்துள்ளார். இந்நிலையில், நேர்மையாக செயல்பட்ட ஆட்டோ ஓட்டுனரை விமான நிலைய உயர் அதிகாரிகள் பாராட்டினர்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...