கிணத்துக்கடவு பகுதியில் 70 சதவீதம் பேர் வாக்காளர் அட்டையில் ஆதார் எண் இணைத்துவிட்டனர் - தேர்தல் பிரிவு அதிகாரி தகவல்

கிணத்துக்கடவு தாலுகாவில் கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி முதல் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் பணி நடைபெற்றது. அதன் பயனாக இதுவரை 63 ஆயிரத்து 881 பேர் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்து இருப்பதாக தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.


பொள்ளாச்சி: சட்டமன்ற தொகுதியான கிணத்துக்கடவு தாலுகா பகுதியில் மொத்தம் 90,038 வாக்காளர்கள் உள்ளனர்.

சமீபத்தில் வாக்காளர் அட்டையில் ஆதார் எண் இணைப்பது அவசியமென அறிவிப்பு நாடு முழுக்க வந்தது.

கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் பணியாது கிணத்துக்கடவு தாலுகாவில் தொடங்கி நடைபெற்றது.

அதன்படி கிணத்துக்கடவு தாலுகா பகுதியில் மொத்தம் இதுவரை 70 சதவீதம் பேர் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைத்து இருப்பதாக தேர்தல் பிரிவு அதிகாரி தகவல் தெரிவித் துள்ளனர்.

அவர் மேற்கொண்டு கூறியதாவது கிணத்துக்கடவு தாலுகா பகுதியில் மொத்தம 90 ஆயிரத்து 38 வாக்காளர்கள் உள்ளதாகவும் அதில் 63 ஆயிரத்து 881 பேர் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்து இருப்பதாக கூறினார்.

மேலும் மீதமுள்ள 26 ஆயிரத்து 157 வாக்காளர்களுக்கு ஆதார் இணைக்கும் பணி தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும் தேர்தல் பிரிவு அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை ஜி.டி. பாலம் கீழ் புதிய பேருந்து நிழற்குடைகள் அமைப்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள ஜி.டி. பாலத்தின் கீழ் நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தங்களில் புதிய நிழற்குடை அமைக்கும...

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...