கேரளாவில் பரவும் பறவை காய்ச்சல் எதிரொலி: கோவை - கேரளா எல்லையில் கண்காணிப்பு பணிகள் தீவிரம்

கேரளாவில் பறவை காய்ச்சல் பரவல் காரணமாக 1500 வாத்துகள் உயிரிழந்த நிலையில் அதன் எதிரொலியாக கோவை - கேரள எல்லை பகுதியில் உள்ள 6 சோதனைச் சாவடிகளிலும் கால்நடை மருத்துவர்கள் தலைமையில் கண்காணிப்பு பணிகள் தீவிரம்.



கோவை: கேரளா மாநிலம் ஆலப்புழாவில் 1500 வாத்துகள் திடீரென உயிரிழந்தன. இந்நிலையில், வாத்துகளை சோதனைக்கு உட்படுத்தியதில், வாத்துகளுக்கு பறவை காய்ச்சல் இருந்தது உறுதி செய்யப்பட்டது.

இதனிடையே பறவை காய்ச்சல் காரணமாக பாதிப்புக்கு உள்ளான 25,000 கோழிகளை உடனடியாக அழிக்க அம்மாநில அரசு அறிவுறுத்தி உள்ளது.

இந்நிலையில், பறவை காய்ச்சல் பரவல் காரணமாக அருகே உள்ள கோவை மாவட்ட எல்லைகளில் வாளையாறு, வேலந்தாளம், முள்ளி, ஆனைக்கட்டி, பட்டிசாலை, தோலம்பாளையம், சோதனைச் சாவடிகளில் தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.



கால்நடை மருத்துவர்கள் தலைமையில் இந்த கண்காணிப்பு பணிகள் நடந்து வருகின்றன. குறிப்பாக கேரளாவிற்கு கோழி, முட்டை, தீவனங்கள் ஏற்றிச்சென்று திரும்ப வரும் வாகன எண்கள், செல்லும் முகவரி பதிவு செய்யப்பட்டு வருகின்றன.



இதனிடையே கேரளாவில் இருந்து கோவை நோக்கி வரும் வாகனங்கள் கிருமி நாசினி தெளிக்கப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...