கோவை பந்த் அன்று திறக்கப்படும் கடைகளுக்கு காவல்துறை பாதுகாப்பு அளிக்க வேண்டும் - வணிகர் சங்க பேரமைப்பு கோரிக்கை மனு

கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் பாஜக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள பந்த் அன்று சிறு, குறு மற்றும் வணிக நிறுவனங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.



கோவை: கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே கடந்த 23ஆம் தேதி கார் வெடி விபத்து சம்பவம் நடைபெற்றது.

இதன் எதிரொலியாக காவல் துறையினர் ஆறு பேரை கைது செய்துள்ளனர். இந்த நிலையில் கோவை மாநகரில் கார் சிலிண்டர் வெடி விபத்து சம்பவத்தின் எதிரொலியாக வரும் 31ம் தேதி கடை அடைப்பு என பாஜக சார்பில் அறிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து இன்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பினர் கடையடைப்பு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கடையடைப்பில் கலந்து கொள்ளாமல் கடைகளை திறந்து வைத்திருக்கும் கடைகளுக்கு அச்சுறுத்தல்கள் ஏற்படாத வண்ணம் காவல்துறை பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.



இதைத்தொடர்ந்து கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கோரிக்கை மனு அளித்தது.

கோரிக்கை மனுவில்:-

கடையடைப்பு வணிகர்களையும் பொதுமக்களையும் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும் எனவே பொது பந்த் தேவைப்படும் போது முழு ஒத்துழைப்பு வழங்கப்படும்.

தற்போது அறிவித்துள்ள பந்த்தை பரிசீலனை செய்ய வேண்டும்.

மேலும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பந்தில் வணிகர் சங்கங்கள் கலந்து கொள்வதில்லை அதே நேரத்தில் அச்சுறுத்தல்கள் ஏற்படாத வண்ணம் காவல்துறை பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை மனு அளித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...