கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம்‌ வார்டு பகுதிகளில்ஆய்வு மேற்கொண்ட ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கினர்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண் 87,92,மற்றும் 88க்குட்பட்ட பகுதிகளை பார்வையிட்ட ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ மேலும் மத்திய மண்டலம்‌ நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாணவ,மாணவிகளுக்கான தேசிய ஒற்றுமை தின விழிப்புணர்வு ஓட்டத்தினை கொடியசைத்து துவக்கி வைத்தார்‌.


கோவை: கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம்‌, வார்டு எண் 87க்குட்பட்ட குனியமுத்தூர்‌, அன்னமநாயக்கனார்‌ வீதியில்‌ மாநகராட்சி தூய்மைப்பணியாளர்கள்‌ மக்கும்‌ குப்பை மற்றும்‌ மக்காத குப்பைகளை தரம்‌ பிரித்து சேகரிக்கும்‌ பணிகளில்‌ ஈடுபட்டு வருவதை மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



அப்பகுதியிலுள்ள பொதுமக்களிடம்‌ குப்பைகளை மக்கும்‌ குப்பை, மக்கா குப்பைகள்‌ என வகைப்படுத்தி தரம்‌ பிரித்து கொடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டுமென தூய்மைப்‌ பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கினர்.

மேலும்‌ குனியமுத்தூர்‌, ஜி.எம்‌.நகரின்‌ சாலையோரங்களில்‌ கொட்டப்படும்‌ குப்பைகளை சிசிடிவி பொருத்தி கண்காணித்து, குப்பை கொட்டும் நபர்களுக்கு அபராதம்‌ விதிக்கவும்‌, கடை, வணிக பகுதிகளில்‌ நள்ளிரவு நேரங்களில்‌ குப்பைகளை எடுக்கவும்‌ சம்பந்தப்பட்ட அலுவலருக்கு அறிவுறுத்தினார்‌.

பின்னர்‌ அப்பகுதியிலுள்ள மழைநீர் வடிகாலை போர்கால அடிப்படையில்‌ தூார்வாரவும்‌, சாலையோர ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றவும்‌ சம்பந்தப்பட்ட அலுவலருக்கு உத்தரவிட்டு, பொதுமக்களிடம்‌ குடிநீர்‌ விநியோகம்‌ குறித்து கேட்டறிந்தார்‌.

அதனைத்தொடர்ந்து, வார்டு எண்‌.92க்குட்பட்ட சுகுணாபுரம்‌ காமராஜர்‌ நகரில்‌ உள்ள பாதாள சாக்கடை பணி விரைவாக துவங்க தமிழ்நாடு குடிநீர் வடிகால்‌ வாரிய பொறியாளருக்கு உத்தரவிட்டார்.

பின்னர்‌ வார்டு எண்‌.88க்குட்பட்ட அபிராமி நகர்‌ மழைநீர் வடிகாலில்‌ உள்ள ஆக்கிரமிப்புகளை சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ்‌ வழங்கி ஆக்கிரமிப்புகளை அகற்ற உதவி நகரமைப்பு அலுவலருக்கு உத்தரவிட்டார்‌.



சர்தார்‌ வல்லபாய்‌ பட்டேல்‌ பிறந்த நாளை முன்னிட்டு மத்திய மண்டலம்‌ நேரு விளையாட்டு அரங்கத்திலிருந்து, வ.உ.சி.மைதானம்‌ மற்றும்‌ எல்‌.ஐ.சி.அலுவலகம்‌ வழியாக மீண்டும்‌ நேரு விளையாட்டரங்கத்திற்கு செல்லும்‌ 200க்கும்‌ மேற்பட்ட பள்ளி மற்றும்‌ கல்லூரி மாணவ, மாணவிகள்‌ கலந்து கொண்ட தேசிய ஒற்றுமை தின விழிப்புணர்வு ஓட்டத்தினை (National Unity DAY -"Rashtriya Ekta DAIWAS" -2022) மாநகராட்சி

ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ கொடியசைத்து துவக்கி வைத்தார்‌.



இந்த ஆய்வின்போது ரா.வெற்றிசெல்வன்‌ மற்றும் தெற்கு மண்டல தலைவர்‌ ரெ.தனலட்சுமி, மாமன்ற உறுப்பினா்‌ பாபு, உதவி ஆணையர்கள்‌ மகேஷ்கனகராஜ்‌, ௮ண்ணாதுரை, மாவட்ட விளையாட்டு மற்றும்‌ இளைஞர்‌ நலன்‌ அலுவலர் ரகுகுமார்‌, உதவி செயற்பொறியாளர்‌ கருப்பசாமி, உதவி நகரமைப்பு அலுவலர்‌ சத்யா, சுகாதார அலுவலர்கள்‌ ராமு, ராமச்சந்தின்‌, உதவி பொறியாளர்கள்‌ கணேசன்‌,கனகராஜ்‌, சுகாதார ஆய்வாளர்‌ தனபா உட்பட பள்ளி தலைமையாசிரியா்கள் மற்றும் 200க்கும்‌ மேற்பட்ட பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள்‌ மேலும் மாநகராட்சி அலுவலர்கள்‌ உடனிருந்தார்கள்‌.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...