வால்பாறை அருகே நியாய விலைக்கடையை உடைத்து சேதப்படுத்தி காட்டு யானைகள் அட்டகாசம்

வால்பாறை நடுமலை எஸ்டேட் அருகே வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானைகள், தாழம்பூ நியாய விலை கடையின் ஜன்னல் கதவை உடைத்து, அரிசி மூட்டைகளை தின்று அட்டகாசம்.



கோவை: கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக காட்டு யானைகள் நடமாட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. காட்டு யானைகள் அடிக்கடி வனப்பகுதியில் இருந்து வெளியேறி குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து வீடுகளை சேதப்படுத்தி வருவதும் தொடர்கதையாகி வருகிறது.

இந்நிலையில் வால்பாறை அடுத்த நடுமலை எஸ்டேட் வனப்பகுதியில் சுற்றித்திரிந்த ஆறு காட்டு யானைகள் நேற்று இரவு நடுமலை எஸ்டேட் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்துள்ளன.



இதனையடுத்து அங்குள்ள தாழம்பூ நியாய விலை கடையின் ஜன்னல் கதவை உடைத்து சேதப்படுத்தியுள்ளன.



மேலும் கடைக்குள் இருந்த இரண்டு மூட்டை அரிசியை தின்றுள்ளன. இதுதொடர்பாக தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர் காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர்.



அடிக்கடி இதுபோன்ற சம்பவங்கள் அரங்கேறுவதால் அச்சமடைந்துள்ள அப்பகுதி மக்கள், வனப்பகுதியில் இருந்து காட்டு யானைகள் வெளியேறுவதை வனத்துறை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

காட்டு யானைகள் நியாய விலைக்கடையை உடைத்து சேதப்படுத்திய சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...