'பாரம்பரிய மாட்டு இனங்களை காப்பது நமது கடமை', கோவை கல்லூரி நிகழ்ச்சியில் கார்த்திகேய சிவசேனாபதி பேச்சு .


கோவை, தடாகம் சாலையில் உள்ள கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரியில், கோவை ரோட்ராக்ட் கிளப்  சார்பில் "தமிழ்நாட்டின் கால்நடை மற்றும் உயிரி பன்முகத்தன்மை கலாச்சார விளையாட்டு" என்னும் தலைப்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இந்திய பல்லுயிர் பாதுகாப்பு குழுமத்தில் நிர்வாக அறங்காவலர் கார்த்திகேய சிவசேனாபதி கலந்து கொண்டு மாணவர்களுடன் உரையாற்றினார்.



இந்நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், 'இந்தியாவில் முன்பு இருந்த மாட்டு இனங்கள் இன்று அழிந்து வரும் சூழ்நிலை நிலவி வருகிறது. வட மாநிலங்கள் மற்றும் தென் மாநிலங்களிலும் இன்ற பரவலாக இருக்ககூடிய மாட்டு இனம் 'ஜெர்சி'. ஜெர்சி இன மாடுகள் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் வரவழைக்கப்பட்டு இனபெருக்கத்தின் மூலம் இன்று அதிகம் இந்தியாவில் பரவியுள்ளது. இவை அதிகம் பால் கொடுக்கும் தன்மை கொண்டவை. மேலும், 1945ம் ஆண்டு இரண்டாம் உலக போர் முடிந்த நிலையில் தற்பொழுது ரசாயனம் மூலமாகவும், பீட்டா போன்ற பன்னாட்டு அமைப்புகள் மூலமாகவும் அந்நிய பொருட்கள் இந்தியாவில் பெரும் இடத்தை பிடித்துள்ளது, இதுவே நமது கலாச்சாரம் மற்றும் பண்பாட்டின் அழிவிற்கு முக்கிய காரணமாக இருக்கிறது.

கடந்த மாதம் ஜல்லிக்கட்டிற்காக தமிழ்நாட்டில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் ஒன்றிணைந்து நடத்திய மாபெரும் புரட்சி மூலமாக இன்று ஜல்லிக்கட்டு விளையாட்டு தமிழ்நாட்டில் மீண்டும் களம் கண்டுள்ளது. இறுதி கட்ட போராட்டத்தில் நுழைந்த சில சமூக விரோதிகளால் தான் போராட்டம் திசை மாறியது. ஜல்லிக்கட்டு விளையாட்டு நிரந்திரமாக தமிழகத்தில் நடை பெற முக்கிய காரணம் மாணவர்கள் தான். இந்தியாவில் மற்றும் தமிழநாட்டில் உள்ள நாட்டு மாட்டு இனங்களை பாதுகாப்பதும் நமது முக்கிய கடமை. அவ்வாறு பாதுகாத்தால் தான், நமக்கு பின்னால் வரும் சந்ததியினருக்கு நம் பாரம்பரிய கால்நடைகளை கொண்டு சேர்க்க முடியும்', என்றார்.   



Newsletter

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...

ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி தொடக்கம்: 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி இன்று (மே 18) தொடங்கி மே 28 வரை நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வசத...