கோவை கார் வெடிப்பு வழக்கு - கைதானோருடன் தொடர்பில் இருந்தவர்கள் வீடுகளில் என்.ஐ.ஏ அதிரடி சோதனை

கோவை கார் வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் மற்றும் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.


கோவை: கோவை உக்கடம் பகுதியில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே கடந்த 23 ஆம் தேதி காரில் சிலிண்டர் வெடித்த சம்பவத்தில் ஜமேசா முபின் என்பவர் உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்து முபினுடன் வெடி பொருட்களை காரில் ஏற்றியவர்கள் உட்பட 6 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

மேலும் உயிரிழந்த ஜமேசா முபின் வீட்டில் இருந்து சுமார் 100 கிலோ வெடி பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இதனையடுத்து தமிழக அரசின் பரிந்துரையின் பேரில் இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டு விசாரணை நடத்தப்படுகிறது.

இந்நிலையில் ஜமேசா முபின் மற்றும் இவ்வழக்கில் கைது செய்யப்பட்டர்களுடன் தொடர்பில் இருந்தவர்களின் வீடுகள் உள்ளிட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் மற்றும் போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.



உக்கடம், கோட்டைமேடு அடுக்குமாடி குடியிருப்பு, புல்லுக்காடு, ஜி.எம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் சோதனை நடைபெற்றது.



மேலும் கோட்டைமேடு பகுதியில் வாகனத்தில் சென்றவாறு தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...