கோவை கிழக்கு மண்டலம்‌ வார்டு பகுதிகளில் நடைபெற்று வரும் புனரமைக்கும்‌ பணிகளை நேரில்‌ சென்று ஆய்வு செய்தார் மாநகராட்சி ஆணையாளர்‌

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம்‌ வார்டு எண் 58க்குட்பட்ட ஒண்டிப்புதூர்‌, சேரன்‌ நகர்‌ பகுதியில் நடைபெற்று வரும் புனரமைக்கும்‌ பணிகளை நேரில்‌ ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ பணியாளா்களுக்கு அறிவுறை வழங்கினார்.


கோவை: கிழக்கு மண்டலம்‌ வார்டு எண் 58க்குட்பட்ட ஒண்டிப்புதூர்‌, சேரன்‌ நகர்‌ பகுதியில்‌ சுகாதார ஆய்வாளர்‌ அலுவலகத்தை ரூ.5.50 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ புனரமைக்கும்‌ பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



ஆர்‌.கே.கார்டன்‌ பகுதி, வார்டு எண்‌.57-க்குட்பட்ட ஒண்டிப்புதூர்‌, சிந்து நகா்‌ ஆகிய பகுதிகளில்‌ மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள்‌ மக்கும்‌ குப்பை மற்றும்‌ மக்காத குப்பைகளை தரம்‌ பிரித்து சேகரிக்கும்‌ பணிகளில்‌ ஈடுபட்டு வருவதை நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



மேலும் அப்பகுதியிலுள்ள பொதுமக்களிடம்‌ குப்பைகளை மக்கும்‌ குப்பை, மக்கா குப்பைகள்‌ என வகைப்படுத்தி தரம்‌ பிரித்து கொடுக்க விழிப்புணா்வு ஏற்படுத்திட வேண்டுமென தூய்மைப்‌ பணியாளா்களுக்கு அறிவுரை வழங்கினார் பின்னர்‌, அப்பகுதியிலுள்ள பொதுமக்களிடம்‌ குடிநீர்‌ விநியோகம்‌ குறித்து கேட்டறிந்தார்‌.



அதனைத் தொடர்ந்து, ஒண்டிப்புதூர்‌, ஆர்‌.கே.கார்டன்‌ பகுதியிலிருந்து சிந்து நகா்‌ வரை சுமார்‌ 350 மீட்டர் தொலைவிற்கு உடனடியாக தார்சாலை அமைத்திடவும்‌, பண்ணாரியம்மன்‌ குடியிருப்பு பகுதியில்‌ ஆழ்குழாய்‌ கிணறு அமைத்து, குடிநீர்‌ விநியோகம்‌ செய்திடவும்‌, புதிய தெருவிளக்குகள்‌ அமைத்து, அப்பகுதியிலுள்ள மழைநீர்‌ வடிகால்‌ தூர்வாரவும்‌ சம்பந்தப்பட்ட பொறியாளருக்கு உத்தரவிட்டர்.



பின்னர் அப்பகுதிகளில்‌ உள்ள வீடுகளில்‌ பொதுமக்கள்‌ தேக்கிவைத்த நீரில்‌ டெங்கு கொசு புழு உள்ளனவா என மாநகராட்சி ஆணையாளா்‌ மு.பிரதாப்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார். தேவையற்ற பொருட்களை அகற்றவும்‌, தேக்கி வைக்கும் நீரை சரியான முறையில்‌ மூடி வைக்கவேண்டும்‌ எனவும் பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கினார்‌.

இந்த ஆய்வின்போது, மாமன்ற உறுப்பினர்கள்‌ சுமித்ரா, சாந்தாமணி, மண்டல உதவி ஆணையர்‌ முத்துராமலிங்கம்‌, மண்டல சுகாதார அலுவலர்‌ முருகா, உதவி பொறியாளர்‌ யோகசித்ரா, சுகாதார ஆய்வாளர்‌ முருகேசன்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள் பலர்‌ உடனிருந்தனர்‌.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...