கோவை கிழக்கு மண்டலம்‌ வார்டு பகுதிகளில் நடைபெற்று வரும் புனரமைக்கும்‌ பணிகளை நேரில்‌ சென்று ஆய்வு செய்தார் மாநகராட்சி ஆணையாளர்‌

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம்‌ வார்டு எண் 58க்குட்பட்ட ஒண்டிப்புதூர்‌, சேரன்‌ நகர்‌ பகுதியில் நடைபெற்று வரும் புனரமைக்கும்‌ பணிகளை நேரில்‌ ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ பணியாளா்களுக்கு அறிவுறை வழங்கினார்.


கோவை: கிழக்கு மண்டலம்‌ வார்டு எண் 58க்குட்பட்ட ஒண்டிப்புதூர்‌, சேரன்‌ நகர்‌ பகுதியில்‌ சுகாதார ஆய்வாளர்‌ அலுவலகத்தை ரூ.5.50 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ புனரமைக்கும்‌ பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



ஆர்‌.கே.கார்டன்‌ பகுதி, வார்டு எண்‌.57-க்குட்பட்ட ஒண்டிப்புதூர்‌, சிந்து நகா்‌ ஆகிய பகுதிகளில்‌ மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள்‌ மக்கும்‌ குப்பை மற்றும்‌ மக்காத குப்பைகளை தரம்‌ பிரித்து சேகரிக்கும்‌ பணிகளில்‌ ஈடுபட்டு வருவதை நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



மேலும் அப்பகுதியிலுள்ள பொதுமக்களிடம்‌ குப்பைகளை மக்கும்‌ குப்பை, மக்கா குப்பைகள்‌ என வகைப்படுத்தி தரம்‌ பிரித்து கொடுக்க விழிப்புணா்வு ஏற்படுத்திட வேண்டுமென தூய்மைப்‌ பணியாளா்களுக்கு அறிவுரை வழங்கினார் பின்னர்‌, அப்பகுதியிலுள்ள பொதுமக்களிடம்‌ குடிநீர்‌ விநியோகம்‌ குறித்து கேட்டறிந்தார்‌.



அதனைத் தொடர்ந்து, ஒண்டிப்புதூர்‌, ஆர்‌.கே.கார்டன்‌ பகுதியிலிருந்து சிந்து நகா்‌ வரை சுமார்‌ 350 மீட்டர் தொலைவிற்கு உடனடியாக தார்சாலை அமைத்திடவும்‌, பண்ணாரியம்மன்‌ குடியிருப்பு பகுதியில்‌ ஆழ்குழாய்‌ கிணறு அமைத்து, குடிநீர்‌ விநியோகம்‌ செய்திடவும்‌, புதிய தெருவிளக்குகள்‌ அமைத்து, அப்பகுதியிலுள்ள மழைநீர்‌ வடிகால்‌ தூர்வாரவும்‌ சம்பந்தப்பட்ட பொறியாளருக்கு உத்தரவிட்டர்.



பின்னர் அப்பகுதிகளில்‌ உள்ள வீடுகளில்‌ பொதுமக்கள்‌ தேக்கிவைத்த நீரில்‌ டெங்கு கொசு புழு உள்ளனவா என மாநகராட்சி ஆணையாளா்‌ மு.பிரதாப்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார். தேவையற்ற பொருட்களை அகற்றவும்‌, தேக்கி வைக்கும் நீரை சரியான முறையில்‌ மூடி வைக்கவேண்டும்‌ எனவும் பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கினார்‌.

இந்த ஆய்வின்போது, மாமன்ற உறுப்பினர்கள்‌ சுமித்ரா, சாந்தாமணி, மண்டல உதவி ஆணையர்‌ முத்துராமலிங்கம்‌, மண்டல சுகாதார அலுவலர்‌ முருகா, உதவி பொறியாளர்‌ யோகசித்ரா, சுகாதார ஆய்வாளர்‌ முருகேசன்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள் பலர்‌ உடனிருந்தனர்‌.

Newsletter

கற்பகம் மருத்துவக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா - 2026

கோவை கற்பகம் மருத்துவக்கல்லூரியில் ஏப்ரல் 26ஆம் தேதி நடந்த பட்டமளிப்பு விழாவில் 163 இளங்கலை மற்றும் 10 முதுகலை மருத்துவர...

போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் பிளாஸ்டிக் கிடங்கில் பயங்கர தீ விபத்து - லட்சக்கணக்கில் சேதம்

கோவை போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் உள்ள பழைய பிளாஸ்டிக் கிடங்கில் நேற்று மாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம்...

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...