தொண்டாமுத்தூர் பகுதியில் உள்ள பள்ளி, வேளாண் சந்தை, ஆரம்ப சுகாதாரங்களை மாவட்ட ஆட்சியர் ஆய்வுசெய்தார்‌

கோவை மாவட்ட தொண்டாமுத்தூர் பகுதியில் உள்ள பூலுவம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் அங்கு சிகிச்சை பெற்று வரும் கர்பினி பெண்களுக்கு தமிழக அரசின் குழந்தை நல பரிசு பெட்டகத்தை வழங்கினார்.



கோவை: தொண்டாமுத்தூர் பூலுவம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர், அங்கு பயிலும் குழந்தைகளிடம் கலந்துரையாடினார். பின்னர் பள்ளி வளாகம் ஆகியவற்றை பார்வையிட்டார்.



மேலும் அங்குள்ள சத்துணவு கூடத்தை ஆய்வு மேற்கொண்டு சத்துணவு குறித்து குழந்தைகளிடம் கேட்டறிந்தார்.



அதனை தொடர்ந்து பூலுவம்பட்டி வேளாண் சந்தையில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர், அங்குள்ள வியாபாரிகளிடமும் பொதுமக்களிடமும் வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.



அதனை தொடர்ந்து பூலுவம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு அங்கு சிகிச்சை பெற்று வரும் கர்பினி பெண்களுக்கு தமிழக அரசின் குழந்தை நல பரிசு பெட்டகத்தை வழங்கினார்.



அதனையடுத்து பேரூர் பகுதியில் உள்ள கால்நடை மருத்துவமனையில் ஆய்வு செய்து குறிப்பேடுகளை ஆய்வு செய்தார்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...