திருப்பதி ஸ்ரீவாரி தோமால சேவை ஒதுக்கீட்டில் பாரபட்சம் - கோவை பக்தர்கள் புகார்

திருப்பதியில் வாரத்தில் மூன்று நாட்கள் அதிகாலையில் நடைபெறும் தோமால சேவையில் பங்கேற்க ஆந்திரா, தெலுங்கானா பக்தர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக கோவையை சேர்ந்த பக்தர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.


கோவை: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அதிகாலை நேரத்தில் பல்வேறு சேவைகள் நடைபெறுவது வழக்கம். இதில் தோமால சேவையும் ஒன்றாகும். வாரத்தில் மூன்று நாட்கள் இந்த சேவை அதிகாலை நேரத்தில் செய்யப்படும்.

இதில் பங்கேற்க விரும்புவோர் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். அவ்வாறு விண்ணப்பித்தால் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு மாதந்தோறும் சேவையில் பங்கேற்க ஒதுக்கீடு பெற்றவர்கள் விபரம் வெளியிடப்படும்.

இவ்வாறு வெளியிடப்படும் பட்டியலில் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநில பக்தர்களுக்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக பக்தர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து கோவை, சத்தி ரோட்டை சேர்ந்த பழனிச்சாமி மற்றும் மகாலிங்கம் உள்ளிட்டோர் கூறியதாவது, திருமலையில் அதிகாலை நடைபெறும் தோமால சேவையில் பங்கேற்பவர்களுக்கு சுவாமியை மிக அருகில் சென்று தரிசிக்கும் வாய்ப்பு கிடைக்கும்.

மாதந்தோறும் 22-ம் தேதி முதல் 24-ம் தேதி மதியம் 12 மணி வரை ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளலாம். நாடு முழுவதும் பெறப்பட்ட பதிவுகளின் அடிப்படையில் 24-ம் தேதி மதியம் 12 மணிக்கு பின் குலுக்கல் முறையில் ஒதுக்கீடு வழங்கப்படும். அவ்வாறு செய்வதில் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவுக்கு மட்டுமே அதிகம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

நவம்பர் மாதத்தில் நடைபெறும் தோமால சேவைக்கு மொத்தம் 132 பேருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் ஆந்திரா 74 பேர், தெலுங்கானா 23 பேர் தமிழகம் உள்ளிட்ட மற்ற அனைத்து மாநிலங்களும் சேர்த்து 35 பேருக்கு மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

டிசம்பர் மாதத்தில் நடைபெறும் தோமால சேவையில் பங்கேற்க மொத்தம் 70 பேருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் ஆந்திரா 34 பேர், தெலுங்கானா 14 பேர், தமிழகம் உள்ளிட்ட மற்ற மாநிலங்கள் 22 பேருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளன. இதன் மூலம் தோமால சேவையில் நடைபெறும் குலுக்கல் முறையில் முறைகேடு நடப்பது தெளிவாகிறது.

இதுகுறித்து திருப்பதி தேவஸ்தானம் சார்பில் வழங்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணை பல முறை தொடர்பு கொண்டும் அதிகாரிகளுடன் பேச முடியவில்லை. கடவுள் முன் அனைவரும் சமம். எனவே, அவருக்கு செய்யும் சேவையில் பங்கேற்க ஒதுக்கீடு செய்வதில் பாரபட்சம் காட்டப்படுவது மிகவும் தவறான செயல்.

திருமலை தேவேஸ்தான நிர்வாகம் இதுபோன்ற முறைகேடுகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பக்தர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது, இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...

விஷு பண்டிகைக்கு கோவையில் இருந்து 5 நாட்களில் 15 டன் காய்கறி,பழங்கள் ஷார்ஜாவுக்கு ஏற்றுமதி

மலையாள புத்தாண்டு விஷு பண்டிகை முன்னிட்டு கோவை விமான நிலையத்திலிருந்து கடந்த 5 நாட்களில் 15 டன் எடை கொண்ட காய்கறிகள் மற்...

கோவை பெரியநாயக்கன்பாளையத்தில்  கொடி அணிவகுப்பு..!

பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் எல்லை பாதுகாப்ப...

அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்த கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன்..!

வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன் நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியை சந்தித...

சின்னியம்பாளையம் அருகே இளைஞரிடம் செல்போன் மற்றும் ரூ.2,000 பறிப்பு - மூவர் மீது வழக்கு

கோவை சின்னியம்பாளையம் ஆர்.ஜி.புதூர் அருகே மூன்று பேர் கொண்ட கும்பல் இளைஞரை திடீரென வழிமறித்து விலை உயர்ந்த செல்போன் மற்ற...

கோவை நேரு நகரில் 8 பவுன் தங்கச் செயின் பறிப்பு - பீளமேடு போலீசார் தீவிர விசாரணை

கோவை நேரு நகர் மேற்கு பேருந்து நிறுத்தம் அருகே பைக்கில் சென்ற பெண்ணிடமிருந்து மர்ம நபர் 8 பவுன் தங்கச் செயினை பறித்து தப...