இனிமேல் யாருடனும் பைக்கில் வேகமாக செல்ல மாட்டேன் - டிடிஎஃப் வாசனுடன் சென்றது குறித்து ஜி.பி.முத்து கருத்து

தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்க கோவை வந்த ஜி.பி.முத்து, டிடிஎஃப் வாசனுடன் பைக்கில் சென்றது குறித்த கேள்விக்கு, இனிமேல் யாருடனும் பைக்கில் வேகமாக செல்ல மாட்டேன் என்றார்.



கோவை: கோவையில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் டிக்டாக் மூலம் பிரபலமான யூடியூபர் ஜி.பி. முத்து கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு முன்னதாக அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது, டிக்டாக் மூலம் அறிமுகமாகி ஊடகங்கள் துணையுடன் தற்போது திரைப்படங்களில் நடித்து வருகிறேன்.

திரைத்துறையில் எனக்கு சிறந்த ஒத்துழைப்பு இருக்கிறது. பிக் பாஸ் அனுபவம் சிறப்பாக இருந்தது. பிக் பாஸ் மூலம் நடிகர் கமல்ஹாசனை சந்தித்தது மிக பெரும் பாக்கியம்.

குழந்தைகளுக்கு உடல்நிலை சரியில்லை என்ற காரணத்தாலேயே பிக் பாஸை விட்டு வெளியேறினேன். தற்போது ஐந்து திரைப்படங்களில் நடித்து வருகிறேன். நடிகை சன்னி லியோனுடன் திரைப் படத்தில் நடித்தது மகிழ்ச்சி.

நான் அவரைப் பார்த்து ஐ லவ் யூ என கூறியவுடன் அவர் என்னை பார்த்து கியூட் என கூறிய போது சிலிர்த்து போனேன்.

கோவையில் யூடியூபர் டி.டி.எஃப்.வாசன் உடன் அதிவேகமாக இருசக்கர வாகனத்தில் சென்றது குறித்த கேள்விக்கு, இதுவரை தான் யாருடனும் அது போன்று வேகமாக சென்றதில்லை. இந்த சம்பவத்திற்கு பிறகு இனிமேல் யாருடனும் அவ்வாறு செல்ல மாட்டேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...