தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள இந்தி எழுத்துக்களை தார் ஊற்றி அழிக்க முயன்ற தபெதிக-வினர் கைது


கோவை அருகே தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள இந்தி எழுத்துக்களை தார் ஊற்றி அழிக்க முயன்ற தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கைது செய்யப்பட்டனர்.



தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மைல்கல்களில் இந்தி எழுத்துக்களில் ஊர் பெயர்கள் இடம் பெற்றிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்தி எழுத்துக்களை அழிக்கும் போராட்டத்தை தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் அறிவித்து இருந்தனர்.

இதன்படி கோவையை அடுத்த நிலம்பூர் பகுதியில் சேலம்- கொச்சின் புறவழிச்சாலை மைல்கல்களில் உள்ள இந்தி எழுத்துக்களை அழிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இப்போராட்டத்தின் போது மத்திய அரசு இந்தி மொழியை திணிப்பதை கண்டித்து முழக்கங்களை எழுப்பியபடி வந்து, இந்தி எழுத்துக்களை அழிக்க முயற்சித்தவர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். 

இதனிடையே போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் ஒரு பகுதியினர் காவல் துறை தடுப்புகளை மீறி இந்தி எழுத்துக்கள் மீது தார் ஊற்ற முயன்றனர். அவர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தி, இழுத்துச்சென்று கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்தி பேசாத மாநிலங்களில் ஆங்கிலம் இணை மொழியாக இருக்குமென்ற முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு உறுதியளித்ததற்கு மாறாக, மத்திய அரசு இந்தி மொழியை வலுக்கட்டாயமாக திணித்து வருவதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம்சாட்டினர். 

தற்போது தேசிய நெடுஞ்சாலைகள் மட்டுமின்றி, மத்திய அரசின் நலத்திட்டங்களில் இந்தியை திணித்து வருவதாக கூறிய அவர்கள், மத்திய அரசு இந்தி மொழியை வலுக்கட்டாயமாக திணிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டுமென தெரிவித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 60-க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர்.

Newsletter

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...

ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி தொடக்கம்: 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி இன்று (மே 18) தொடங்கி மே 28 வரை நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வசத...