காற்றாலை மூலம் கடந்த 8 மாதத்தில் 10,000 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி - காற்றாலை மின் உற்பத்தியாளர்கள் சங்கம்

தமிழகத்தில், கடந்த மார்ச் மாதம் முதல் அக்டோபர் வரை 10,000 மில்லியன் யூனிட் மின்சாரம் காற்றாலைகள் மூலம் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது என இந்திய காற்றாலை மின் உற்பத்தியாளர்கள் சங்கம் தகவல்.


கோவை: சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாதது, மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்காதது உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்களை சூரிய ஒரி, காற்றாலை உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தித்துறை கொண்டுள்ளது.

இதன் காரணமாகவே மத்திய மற்றும் மாநில அரசுகள் போட்டி போட்டுக் கொண்டு புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தி துறையின் வளர்ச்சிக்கு பல்வேறு சிறப்பு திட்டங்களை அமல்படுத்தி வருகின்றன.

இந்நிலையில், காற்றாலை மின் உற்பத்தியில் தமிழகம் தேசிய அளவில் முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தில் 8,500 மெகாவாட் மின்உற்பத்தி செய்வதற்கான கட்டமைப்பு வசதிகள் உள்ளன.

ஆண்டுதோறும் ஏப்ரல் மாதத்தில் தொடங்கி அக்டோபர் வரை காற்று பருவகாலம் என்று அழைக்கப்படுகிறது. இந்த காலக்கட்டத்தில் தமிழகத்தின் தினசரி மொத்த மின்தேவையில் காற்றாலைகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் மிக அதிகம் பங்களிக்கும்.

இதுதொடர்பாக இந்திய காற்றாலை மின் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் கஸ்தூரி ரங்கையன் கூறியதாவது,

கடந்த காலங்கள் போல் இல்லாமல் இன்று காற்றாலை, சூரியஒளி உள்ளிட்ட ஆற்றல் உற்பத்தித்துறை மீது மக்கள் அதிக விழிப்புணர்வு பெற்றுள்ளனர். எதிர்வரும் காலங்களில் மின்தேவையை பூர்த்தி செய்வதில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தித்துறை மிக முக்கிய பங்கு வகிக்கும்.

இந்த ஆண்டு காற்று பருவகாலம் மார்ச் 15ஆம் தேதி தொடங்கி, அக்டோபர் 31ஆம் தேதியுடன் நிறைவடைந்துள்ளது. தமிழகத்தில் இந்த ஆண்டு காற்று பருவ காலத்தில் மொத்தம் 10 ஆயிரம் மில்லியன் யூனிட் மின்சாரம் காற்றாலைகள் மூலம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.

மின்சாரத்தை வீணடிக்காமல் தமிழக மின்வாரியம் உரிய முறையில் பெற்றுக் கொண்டது. ஏற்கனவே தமிழக அரசு சார்பில் பெறப்பட்ட மின்சாரத்துக்கு நிலுவை வைக்கப்பட்டுள்ள தொகை, இதுவரை இரண்டு தவணைகளாக மின் உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

மீதமுள்ள தொகையும் தொடர்ந்து விநியோகம் செய்யப்படும் என அரசு தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கையை காற்றாலை மின்உற்பத்தியாளர்கள் சங்கம் வரவேற்கிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி இந்திய அளவில் 7வது இடம் பெற்று சாதனை

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, EducationWorld தேசிய தரவரிசையில் இந்திய அளவில் 7வது இடத்தையு...

டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்: பீளமேடு வாணிப கழக அலுவலகத்தில் பரபரப்பு

கோவை பீளமேடு மதுபான கிடங்கு வாணிப கழக அலுவலகத்தில் டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம் ந...

சோமனூர் பேருந்து நிலையம் அருகே மின் கம்பத்தில் தீ விபத்து

கோவை சோமனூர் பேருந்து நிலையம் அருகே ஏப்ரல் 27 மதியம் மின் கம்பத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. மதிய நேரத்தில் மக்கள்...

திருப்பூரில் கட்சித் தலைவர் மீது அவதூறு பரப்பியதாக புகார்

திருப்பூரில் மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமீமுன் அன்சாரி மீது சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாகக் குற்றம் சாட்டி இந்தி...

GCT கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள EVM இயந்திரங்களை கலெக்டர் திடீர் ஆய்வு

கோவை மாவட்டம் 10 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய EVM இயந்திரங்கள் தடாகம் சாலை GCT கல்லூரியில் பாதுகாப்பாக...

கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தை திமுக நிர்வாகிகள் ஆய்வு

கோவை மாவட்டத்தில் 10 தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ண...