கோவை கார் வெடிப்பு:வழக்கு என்.ஐ.ஏ-விடம் ஒப்படைக்கப்பட்டாலும் காவல்துறை தொடர்ந்து கண்காணிப்பு

கோவை கார் வெடிப்பு குறித்த விசாரணை கோப்புகள் அனைத்தும் என்.ஐ.ஏவிடம் ஒப்படைக்கப்பட்டாலும் மாநகர காவல்துறை தொடர்ந்து கண்காணித்து வருவதாக கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தகவல்.



கோவை: கோவை மாநகரில் போக்குவரத்து விதிமீறல்கள் மற்றும் குற்றவாளிகள் கண்டறிதலுக்கு ட்ரோன் கேமரா பயன்படுத்துவது தொடர்பாக காவலர்களுக்கு இரண்டு நாள் பயிற்சி துவங்கியது.

காந்திபுரம் பகுதியில் நடைபெறும் இந்த முகாமை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார். டிஜி இன்ஸ்டிட்யூட் ஆஃப் ட்ரோன்ஸ் நிறுவனத்தின் ஐந்து வல்லுநர்களை கொண்டு கோவை மாநகர காவல்துறையில் பணிபுரியும் 20 காவலர்களுக்கு முதல் கட்டமாக இரண்டு நாள் பயிற்சி அளிக்கப்படுகிறது.

பயிற்சி முகாமை துவக்கி வைத்த பின்னர், மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், செய்தியாளர்களிடம் பேசியதாவது, கோவை மாநகரில் போக்குவரத்து விதி மீறலில் ஈடுபடும் வாகனங்கள், சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளை கண்காணிப்பதற்கு ட்ரோன் கேமராக்கள் அதிக அளவில் பயன்படுகிறது.

கோவை மாநகர காவல்துறையில் ஏற்கனவே ஒரு ட்ரோன் கேமரா உள்ள நிலையில் அதில் புதுப்பிக்க வேண்டிய அப்ளிகேஷன்கள் மற்றும் புதிய வகையிலான நவீன ட்ரோன்களை கையாளும் விதம் ஆகியவை குறித்து காவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக தனிப்படை போலீசார் புலனாய்வு செய்த அனைத்து கோப்புகளும் தேசிய புலனாய்வு முகமை வசம் ஒப்படைக்கப்பட்டு விட்டது.

ஆனாலும் மாநகர காவல் துறை அப்பகுதிகளில் தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது. வெளி மாவட்டங்களில் இருந்து கோவைக்கு பாதுகாப்பிற்காக வரவழைக்கப்பட்ட காவல்துறையினர் அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

கோவை மாநகர காவல் துறையினர் அனைத்து இடங்களிலும் தீவிர பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவ்வாறு கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் பேசினார்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி இந்திய அளவில் 7வது இடம் பெற்று சாதனை

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, EducationWorld தேசிய தரவரிசையில் இந்திய அளவில் 7வது இடத்தையு...

டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்: பீளமேடு வாணிப கழக அலுவலகத்தில் பரபரப்பு

கோவை பீளமேடு மதுபான கிடங்கு வாணிப கழக அலுவலகத்தில் டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம் ந...

சோமனூர் பேருந்து நிலையம் அருகே மின் கம்பத்தில் தீ விபத்து

கோவை சோமனூர் பேருந்து நிலையம் அருகே ஏப்ரல் 27 மதியம் மின் கம்பத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. மதிய நேரத்தில் மக்கள்...

திருப்பூரில் கட்சித் தலைவர் மீது அவதூறு பரப்பியதாக புகார்

திருப்பூரில் மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமீமுன் அன்சாரி மீது சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாகக் குற்றம் சாட்டி இந்தி...

GCT கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள EVM இயந்திரங்களை கலெக்டர் திடீர் ஆய்வு

கோவை மாவட்டம் 10 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய EVM இயந்திரங்கள் தடாகம் சாலை GCT கல்லூரியில் பாதுகாப்பாக...

கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தை திமுக நிர்வாகிகள் ஆய்வு

கோவை மாவட்டத்தில் 10 தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ண...