கோவை தொண்டாமுத்தூரில் வரும் 12 ஆம் தேதி இளைஞர் திறன் திருவிழா - மாவட்ட ஆட்சியர் சமீரன் அறிவிப்பு

தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் வரும் 12ஆம் தேதி நடைபெறவுள்ள இளைஞர் திறன் திருவிழாவில் DDUGKY, RSETI, TNSDC திட்டங்களின் கீழ் இலவச திறன் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.


கோவை: தமிழக மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்(மகளிர் திட்டம்) மூலம் கோவை மாவட்டம் தொண்டாமுத்தூரில் வட்டார அளவில் இளைஞர் திறன் திருவிழா வரும் நவம்பர் 12ஆம் தேதி நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் சமீரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை மாவட்டம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) மூலம் காரமடை வட்டாரத்தில், வட்டார அளவில் இளைஞர் திறன் திருவிழா நடைபெற உள்ளது.

இதில் DDUGKY, RSETI, TNSDC கீழ் நடைபெறும் இந்த இலவச திறன் பயிற்சியில் கலந்து கொள்ள 18 முதல் 45 வயது வரை உள்ள கிராமப்புற மற்றும் நகர்ப்புற இளைஞர்கள் (ஆண், பெண், இருபாலர்) தகுதியானவர்கள்.

இது பேரூர் சாந்தலிங்க அடிகளார் தமிழ் கல்லூரியில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது.

DDUGKY திட்டத்தின் கீழ் warehouse supervisor, retail sales associate, Android mobile phone operator, assistant catering manager general duty assistant, sewing machine operator knits, business correspondent and business facilitator ஆகிய பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.

RSETI திட்டத்தின் கீழ் beauty parlour management, women's tailor, candle making, pickle and masala powder, costume jewellery, Bee keeping ஆகிய பயிற்சிகள் மற்றும் TNSDC திட்டத்தின் கீழ் IT- It's, Apparel, Automotive, Textile and Handlooms, Healthcare போன்ற sector-ன் கீழ் பயிற்சிகள் நடைபெற உள்ளது.

மேலும் இளைஞர் திறன் திருவிழாவில் எட்டாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை படித்த இளைஞர்கள் கல்வி சான்றிதழ், ஆதார் அட்டை, சுயவிவரம், புகைப்படம் மற்றும் இதர தகுதி சான்றிதழ்களுடன் (அசல் மற்றும் நகல்) கலந்து கொண்டு பயனடைய வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Newsletter

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...