கோவை நகரின் பருவநிலை மாற்ற பிரச்சனைகளை எதிர்கொள்வது தொடர்பான கருத்தரங்கு

கோவை நகரின் பருவநிலை மாற்றப்‌ பிரச்சனைகளை எதிர்கொள்வது தொடர்பான கருத்தரங்கை மாநகராட்சி ஆணையாளர்‌ பிரதாப்‌ தொடங்கி வைத்தார்.


கோவை: கோவை பந்தப சாலையிலுள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நகர காலநிலை மாற்றம்‌ தொடர்பான கருத்தரங்கு நடைபெற்றது. மத்திய அரசின்‌ வீட்டுவசதி மற்றும்‌ நகர்ப்புற விவாக அமைச்சகம்‌ உருவாக்கிய Climate Smart City Assessment Framework என்ற திட்டத்தின்கீழ்‌, கோவை நகரின் காலநிலையைத்‌ பாதுகாக்கும் நடவடிக்கைகளை செயல்படுத்த மாநகராட்சி நிர்வாகம்‌ மேற்கொண்டுள்ள முயற்சிகளின்‌ விரிவாக்கமாக இந்த கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.



கோவை நகரம் எதிர்கொண்டு வரும் காலநிலை மாற்றப்‌ பிரச்சனைகளை எதிர்கொள்வதற்கு இந்த கருத்தரங்கம்‌ பயனுள்ள வகையில் அமைந்தது.



கருத்தரங்கில் உரையாற்றிய கோவை மாநகராட்சி ஆணையாளர்‌ பிரதாப், தமிழகத்தில்‌ உள்ள அனைத்து நகரங்களும்‌ காலநிலை மாறுபாடுகளை எதிர்கொள்வதாகவும், அதன்‌ தாக்கங்கள்‌ தற்போது நகரங்களில்‌ பாதிப்பை ஏற்படுத்துவதாக கூறினார். பருவநிலை மாற்றத்தின் சவால்களை எதிர்கொள்ள இது செயல்பட வேண்டிய நேரம்‌ என்றும்‌ குறிப்பிட்டார்.



இந்த கருத்தரங்கில் மாநகராட்சி துணை ஆணையாளர்‌ ஷர்மிளா, தமிழ்நாடு நகர்ப்புற ஆய்வுகள்‌ நிறுவன இணை இயக்குநர் சரஸ்வதி, தமிழ்நாடு குடிநீர் வடிகால்‌ வாரிய கண்காணிப்பு பொறியாளர்‌ செந்தில்குமார்‌, நிர்வாக பொறியாளர்‌ லட்சுமணன்‌, துணை திட்ட அலுவலர்‌ செபாஸ்டின்‌, நகாப்புற மண்டல மேலாண்மை ஆலோசகா்‌ லிஜீ, மற்றும் கோவையில்‌ உள்ள தொழில்நுட்ப நிறுவனங்கள்‌, அரசு சாரா நிறுவனங்கள்‌, கல்வியாளர்கள்‌, வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌, தமிழ்நாடு மின்சார வாரியம்‌, தமிழ்நாடு குடிநீர்‌ வடிகால்‌ வாரியம்‌, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்‌, வனத்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட துறைகளை சோந்த 50-க்கும்‌ மேற்பட்ட உறுப்பினர்கள்‌ பங்கேற்றனர்.

Newsletter

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிட்கோ, சு...

இரும்பொரை துணை மின்நிலையத்தில் இன்று மின்தடை

இரும்பொரை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இரும்பொரை, பெத்...

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுவதால...

கோவை கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் 23-06-2026 அன்று கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றத...

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...