கோவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் திமுக மாவட்ட செயற்குழு கூட்டம்

திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் நடைபெறும் அரசு, கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க நாளை கோவைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகை தரவுள்ள நிலையில், இன்று அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் செயற்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது.



கோவை: மின்சார மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில், இன்று கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் கோவை மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது.



இக்கூட்டத்தில், திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் நடைபெறும் அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க நாளை கோவைக்கு வருகை தரும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகை வரவேற்பு, கட்சி சார்ந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் கோவை மாவட்டத்தில் திமுக அலுவலகம் அமைப்பது குறித்தும் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, கோவை மாவட்டத்தில் கட்சி செயல்பாடுகள் குறித்து கலந்தாலோசிக்கபடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



கூட்டத்தில், கோவை மாவட்ட திமுக செயலாளர்கள் நா.கார்த்திக், ரவி, தளபதி முருகேசன் உள்ளிட்டோர் முன்னிலை வகிப்பார்கள் எனவும் கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் கட்சி சார்பில் பங்கேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம், நகர, பகுதி, ஒன்றியம், பேரூர் கழக நிர்வாகிகள் என 300க்கும் மேற்பட்டோர் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.





Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...