நீலகிரி மாவட்டத்தில் மருத்துவ படிப்பில் முதல் இருளர் சமுதாயப் பெண் - குவியும் பாராட்டுகள்

கோத்தகிரி அருகேயுள்ள தும்பி பெட்டு இருளர் கிராமத்தை சேர்ந்த ஸ்ரீமதி என்னும் பெண் நீட் தேர்வு எழுதி அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் பிடித்துள்ளார். இதன் மூலம் இருளர் சமுகத்தில் மருத்துவ படிப்பிற்கு முதல் பெண்ணான ஸ்ரீமதியை நீலகிரி கலெக்டர் அம்ரித் அழைத்து பாராட்டு தெரிவித்தார்.



நீலகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே தும்பி பெட்டு இருளர் கிராமத்தைச் சேர்ந்த பாலன், ராதா தம்பதி இவர்களது மகள் ஸ்ரீமதி அங்குள்ள தனியார் பள்ளியில் 2019 ம் ஆண்டில் பிளஸ் டூ முடித்தார்.

பிறகு தனது மருத்துவ கனவை நனவாக்க நீட் தேர்வு எழுதினார். அதில் எதிர்பார்த்த கட்- ஆப் இல்லாததால் மருத்துவக் கல்லூரியில் சீட் கிடைக்கவில்லை. நீட் தேர்வுக்கான பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டு படித்தார் .

4 வது முறையாக 2022 நடப்பாண்டு நீட் தேர்வில் 370 மார்க் எடுத்து தேர்ச்சி பெற்றார். திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது.

மாணவி ஸ்ரீமதி இது கூறித்து கூறுகையில், 2019 ம் ஆண்டில் பிளஸ் டூ முடித்தேன். மருத்துவ கனவை நனவாக்க நீட் தேர்வு எழுதினேன். போதிய கட்-ஆப் இல்லாததால் இடம் கிடைக்கவில்லை. வேறு துறையில் சேர்ந்து படிக்க எண்ணம் இல்லை மருத்துவ கனவை நனவாக்கி ஏழை, எளிய மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்பதுதான் என் குறிக்கோளாக இருந்ததால் 4 வது முறையாக நீட் தேர்வு எழுதி 370 மார்க் எடுத்து திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியில் சீட் கிடைத்துள்ளது என்றார்.



இதன் மூலம் நீலகிரியில் முதல் இருளர் சமுதாயப் பெண் மருத்துவ படிப்பில் இடம் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.



கடின உழைப்பால் தொடர்ந்து நீட் தேர்வு எழுதி மருத்துவ கனவை நனவாக்கிய ஸ்ரீமதியை இருளர் சமுதாயம் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பாராட்டி வருகின்றனர் அவர்களை தொடர்ந்து நீலகிரி கலெக்டர் அம்ரித் அழைத்து பாராட்டு தெரிவித்துள்ளார்.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...