நீலகிரி மாவட்டத்தில் மருத்துவ படிப்பில் முதல் இருளர் சமுதாயப் பெண் - குவியும் பாராட்டுகள்

கோத்தகிரி அருகேயுள்ள தும்பி பெட்டு இருளர் கிராமத்தை சேர்ந்த ஸ்ரீமதி என்னும் பெண் நீட் தேர்வு எழுதி அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் பிடித்துள்ளார். இதன் மூலம் இருளர் சமுகத்தில் மருத்துவ படிப்பிற்கு முதல் பெண்ணான ஸ்ரீமதியை நீலகிரி கலெக்டர் அம்ரித் அழைத்து பாராட்டு தெரிவித்தார்.



நீலகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே தும்பி பெட்டு இருளர் கிராமத்தைச் சேர்ந்த பாலன், ராதா தம்பதி இவர்களது மகள் ஸ்ரீமதி அங்குள்ள தனியார் பள்ளியில் 2019 ம் ஆண்டில் பிளஸ் டூ முடித்தார்.

பிறகு தனது மருத்துவ கனவை நனவாக்க நீட் தேர்வு எழுதினார். அதில் எதிர்பார்த்த கட்- ஆப் இல்லாததால் மருத்துவக் கல்லூரியில் சீட் கிடைக்கவில்லை. நீட் தேர்வுக்கான பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டு படித்தார் .

4 வது முறையாக 2022 நடப்பாண்டு நீட் தேர்வில் 370 மார்க் எடுத்து தேர்ச்சி பெற்றார். திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது.

மாணவி ஸ்ரீமதி இது கூறித்து கூறுகையில், 2019 ம் ஆண்டில் பிளஸ் டூ முடித்தேன். மருத்துவ கனவை நனவாக்க நீட் தேர்வு எழுதினேன். போதிய கட்-ஆப் இல்லாததால் இடம் கிடைக்கவில்லை. வேறு துறையில் சேர்ந்து படிக்க எண்ணம் இல்லை மருத்துவ கனவை நனவாக்கி ஏழை, எளிய மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்பதுதான் என் குறிக்கோளாக இருந்ததால் 4 வது முறையாக நீட் தேர்வு எழுதி 370 மார்க் எடுத்து திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியில் சீட் கிடைத்துள்ளது என்றார்.



இதன் மூலம் நீலகிரியில் முதல் இருளர் சமுதாயப் பெண் மருத்துவ படிப்பில் இடம் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.



கடின உழைப்பால் தொடர்ந்து நீட் தேர்வு எழுதி மருத்துவ கனவை நனவாக்கிய ஸ்ரீமதியை இருளர் சமுதாயம் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பாராட்டி வருகின்றனர் அவர்களை தொடர்ந்து நீலகிரி கலெக்டர் அம்ரித் அழைத்து பாராட்டு தெரிவித்துள்ளார்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...