நீலகிரியில் உள்ள தமிழ்நாடு அரசு தேயிலை தோட்ட கழகம் ஒருபோதும் மூடப்படாது - நீலகிரி எம்.பி ஆ.ராசா உறுதி

நஷ்டத்தில் இயங்கும் தமிழ்நாடு அரசு தேயிலை தோட்ட கழகம் மூடப்படுவதாக வெளியான வதந்தியால் ஊழியர்களிடையே அச்சம் ஏற்பட்ட நிலையில், மூடப்படாது என திமுக எம்.பி ஆ.ராசா தகவல்.



நீலகிரி: தமிழ்நாடு அரசு தேயிலை தோட்ட கழகம் நஷ்டத்தில் இயங்குவதால் தொழிற்சாலை மூடப்படுவதாக சிலர் வதந்திகளை பரப்பி வந்த நிலையில், தொழிலாளர்கள் அச்சமடைந்தனர்.



இந்நிலையில் இதுதொடர்பாக நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள தமிழக விருந்தினர் மாளிகையில் வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், நீலகிரி மக்களவை உறுப்பினர் ஆ.ராசா ஆகியோர் தலைமையில், தொழிற்சங்க தலைவர்கள், அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு திமுக எம்.பி ஆ.ராசா செய்தியாளர்களிடம் பேசியதாவது,



தமிழ்நாடு அரசு தேயிலை தோட்ட கழகம் ஒருபோதும் மூடப்படாது. ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் தற்போது தமிழ்நாடு அரசு தேயிலை தோட்ட கழக குடியிருப்புகளில் வாழ்ந்து வரும் நிலையில், அவர்களை வெளியேற்றுவதாக சர்ச்சை எழுந்துள்ளது.

ஒருபோதும் அவர்களை வெளியேற்றும் எண்ணம் அரசுக்கு கிடையாது. ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு அரசு சார்பில் குடியிருப்புகள் கட்டித்தர அரசு சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு அரசு தேயிலை தோட்ட கழகத்தை புனரமைக்க தனியார் நிறுவன மதிப்பீட்டு வல்லுநர்களைக் கொண்டு ஆய்வு நடத்தப்பட்டு தொழிற்சாலையை புனரமைப்பதற்கான அறிக்கை தமிழக அரசிடம் தாக்கல் செய்ப்படும்.

இதனையடுத்து அதற்கான நிதி ஒதுக்கி தேயிலை தோட்ட கழகம் புனரமைக்கப்பட்டு, கூடுதலாக தேயிலை தோட்ட தொழிலாளர்களை பணியில் அமர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் முதன்மை, தலைமை வன பாதுகாவலர் சையது முஜிமில் அப்பாஸ், நீலகிரி மாவட்ட ஆட்சியர் எஸ்.பி அம்ரித், முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேஷ் மற்றும் துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...