10 சதவீத இடஒதுக்கீடு குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பின் மறுசீராய்வு மனு தாக்கல் குறித்து அனைத்து கட்சி கூட்டத்தில் விவாதிக்கப்படும் - சட்டத்துறை அமைச்சர் ரகுபதி

ஆன்லைன் ரம்மிக்கு எதிரான சட்டம் உள்பட தமிழக சட்டப்பேரவையில், நிறைவேற்றப்பட்ட 20 சட்ட மசோதாக்கள் ஆளுநர் மாளிகையில் நிலுவையில் உள்ளது என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு.


சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில், அரசு சட்டக் கல்லூரிகளில் முதுநிலை சட்டப்படிப்பில் கலந்தாய்வு மூலம் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு ஒதுக்கீட்டு ஆணைகளை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி வழங்கினார்.

இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் ரகுபதி பேசியதாவது,



ஆன்லைன் ரம்மிக்கு எதிராக சட்டப்பேரவையில் நிறைவேற்றி ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட சட்ட மசோதா மீது ஆளுநர் இதுவரை எந்த விளக்கமும் கேட்கவில்லை.

ஆன்லைன் ரம்மி தடை சட்டம் குறித்து ஆளுநர் விளக்கம் கேட்கும் பட்சத்தில், உரிய விளக்கம் அளிக்கப்படும். தமிழக சட்டப்பேரவையில், நிறைவேற்றப்பட்ட 20 சட்ட மசோதாக்கள் ஆளுநர் மாளிகையில் நிலுவையில் உள்ளது. சில மசோதாக்களுக்கு விளக்கம் கேட்கப்பட்டு விளக்கமும் கொடுக்கப்பட்டுள்ளது.

பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10 சதவீதம் இட ஒதுக்கீடு தொடர்பாக உச்ச நீதிமன்ற தீர்ப்பின் மீது மறு சீராய்வு மனு தாக்கல் செய்யலாமா என்பது குறித்து, அனைத்து கட்சி கூட்டத்தில் விவாதிக்கப்படும். 10% இட ஒதுக்கீடு தேவையில்லை என்ற மக்கள் கருத்தை திமுக தொடர்ந்து வலியுறுத்தும்.

கேரள மாநிலம் டிஜிட்டல் சர்வே எடுத்து வரும் சூழ்நிலையில், தமிழக எல்லைக்குள் காவல் நிலையம் அமைத்துள்ளதாக எழும் புகார்கள் குறித்த கேள்வி எழுப்பியதற்கு, முதலமைச்சர்தான் முடிவெடுப்பார். சட்ட ரீதியான நடவடிக்கைகள் எதை எடுக்க வேண்டுமோ அதனை நிச்சயமாக எடுப்போம்.

இவ்வாறு அமைச்சர் ரகுபதி பேசினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...