கோவையில் டெங்கு தடுப்பு முன் எச்சரிக்கை குறித்து மாநகராட்சி ஆணையாளர்‌ தலைமையில் கலந்தாய்வுக்‌ கூட்டம்

கோவையில் டெங்கு தடுப்பு முன் எச்சரிக்கை நடவடிக்கை குறித்த கலந்தாய்வுக்‌ கூட்டம் நடைபெற்றது.


கோவை: கோவைமாநகராட்சி அலுவலகக்‌ கூட்டரங்கில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ பிரதாப் தலைமையில்‌ கூட்டம் நடைபெற்றது. கோவையில் பெய்து வரும்‌ பருவமழை காரணமாக அனைத்து வார்டுகளிலும் தொடாந்து 3 நாட்களுக்கு துப்புரவு மற்றும்‌ டெங்கு தடுப்பு பணிகள்‌ Rapid Response Teams மூலம்‌ மேற்கொள்ளவும்‌, வார்டு பகுதிகளில்‌ வாரம்‌ ஒருமுறை காய்ச்சல்‌ முகாம்கள்‌ நடத்தவும் மாநகாரட்சி ஆணையாளர் பிரதாப் அறிவுறுத்தியுள்ளார்.



மாநகராட்சியின்‌ அனைத்து வார்டுகளிலும் மழை நீர் தேங்காத வண்ணம்‌ பார்த்து கொள்ளவும்‌, வீடுதோறும்‌ டெங்கு தடுப்பு பணிகள்‌ மூலம்‌ கொசு புழுக்கள்‌ உள்ளனவா என்பதனை உறுதிபடுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அனைத்து வார்டுகளிலும் விநயோகம்‌ செய்யப்படும்‌ குடிநீரின்‌ தரம்‌ குறித்து சோதனை செய்திடவும்‌, அவற்றில்‌ ரேக்‌ தன்மை குறித்து உறுதிப்படுத்த அந்தந்த குழாய்‌ ஆய்வாளா்களுக்கும்‌,சம்மந்தப்பட்ட சுகாதார ஆய்வாளா்களுக்கும்‌ அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது மழைக்காலம்‌ என்பதால்‌ பொதுமக்கள்‌ அனைவரும்‌ குடிநீரை காய்ச்சி பருகவும், காய்ச்சல்‌ உள்ளிட்ட அறிகுறிகள்‌ தென்பட்டால்‌ உடனடியாக அருகில்‌ உள்ள நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம்‌ அல்லது அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுக்கொள்ளுமாறும் மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் அறிவுறுத்தியுள்ளார்.



இக்கூட்டத்தில்‌ மாவட்ட சுகாதார துணை இயக்குநர்‌ அருணா, நகரா நல அலுவலர்‌ பிரதீப்‌ வாசுதேவன்‌ கிருஷ்ணகுமார்‌, அனைத்து மண்டல சுகாதார அலுவலா்கள்‌, சுகாதார ஆய்வாளாகள்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலார்கள்‌ கலந்து கொண்டனர்‌.

Newsletter

கிணத்துக்கடவு தொகுதியில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி மது விற்பனை நடந்தால் காவல் நிலைய முற்றுகை - எம்.எல்.ஏ விக்னேஷ்

கிணத்துக்கடவு தொகுதியை மது மற்றும் போதைப்பொருட்கள் இல்லாத முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என தெரிவித்த தவெக எம்.எல்.ஏ வி...

கோவை அதிமுக பிரமுகர் மற்றும்வழக்கறிஞர் வினீத் தவெகவில் இணைந்தார்

அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சிப் பிரச்சினைகளால் கட்சிப் பொறுப்பில் இருந்து விலகிய கோவை மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்க...

மதுவிலக்கே தீர்வு; கள்ளுக்கு அனுமதி வேண்டும் - கொமதேக தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன்

717 டாஸ்மாக் கடைகளை மூடும் அரசின் நடவடிக்கையை வரவேற்ற கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன், மதுபழக்கத்தை க...

FL2 மதுபான உரிமங்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் - முதலமைச்சருக்கு வானதி சீனிவாசன் கோரிக்கை

பொறுப்பேற்ற மூன்றாவது நாளிலேயே பள்ளி, கல்லூரி மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகிலிருந்த 717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தர...

கோவை மாவட்ட பஞ்சாயத்துக்கு தேசிய விருது: நல்லாட்சிக்கான அங்கீகாரம்

கோவை மாவட்ட பஞ்சாயத்து தேசிய அளவில் மூன்றாம் இடம் பெற்று நானாஜி தேஷ்முக் விருதை வெல்ல தேர்வானது. வறுமை ஒழிப்பு, நீர் மேல...