கோவையில் டெங்கு தடுப்பு முன் எச்சரிக்கை குறித்து மாநகராட்சி ஆணையாளர்‌ தலைமையில் கலந்தாய்வுக்‌ கூட்டம்

கோவையில் டெங்கு தடுப்பு முன் எச்சரிக்கை நடவடிக்கை குறித்த கலந்தாய்வுக்‌ கூட்டம் நடைபெற்றது.


கோவை: கோவைமாநகராட்சி அலுவலகக்‌ கூட்டரங்கில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ பிரதாப் தலைமையில்‌ கூட்டம் நடைபெற்றது. கோவையில் பெய்து வரும்‌ பருவமழை காரணமாக அனைத்து வார்டுகளிலும் தொடாந்து 3 நாட்களுக்கு துப்புரவு மற்றும்‌ டெங்கு தடுப்பு பணிகள்‌ Rapid Response Teams மூலம்‌ மேற்கொள்ளவும்‌, வார்டு பகுதிகளில்‌ வாரம்‌ ஒருமுறை காய்ச்சல்‌ முகாம்கள்‌ நடத்தவும் மாநகாரட்சி ஆணையாளர் பிரதாப் அறிவுறுத்தியுள்ளார்.



மாநகராட்சியின்‌ அனைத்து வார்டுகளிலும் மழை நீர் தேங்காத வண்ணம்‌ பார்த்து கொள்ளவும்‌, வீடுதோறும்‌ டெங்கு தடுப்பு பணிகள்‌ மூலம்‌ கொசு புழுக்கள்‌ உள்ளனவா என்பதனை உறுதிபடுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அனைத்து வார்டுகளிலும் விநயோகம்‌ செய்யப்படும்‌ குடிநீரின்‌ தரம்‌ குறித்து சோதனை செய்திடவும்‌, அவற்றில்‌ ரேக்‌ தன்மை குறித்து உறுதிப்படுத்த அந்தந்த குழாய்‌ ஆய்வாளா்களுக்கும்‌,சம்மந்தப்பட்ட சுகாதார ஆய்வாளா்களுக்கும்‌ அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது மழைக்காலம்‌ என்பதால்‌ பொதுமக்கள்‌ அனைவரும்‌ குடிநீரை காய்ச்சி பருகவும், காய்ச்சல்‌ உள்ளிட்ட அறிகுறிகள்‌ தென்பட்டால்‌ உடனடியாக அருகில்‌ உள்ள நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம்‌ அல்லது அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுக்கொள்ளுமாறும் மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் அறிவுறுத்தியுள்ளார்.



இக்கூட்டத்தில்‌ மாவட்ட சுகாதார துணை இயக்குநர்‌ அருணா, நகரா நல அலுவலர்‌ பிரதீப்‌ வாசுதேவன்‌ கிருஷ்ணகுமார்‌, அனைத்து மண்டல சுகாதார அலுவலா்கள்‌, சுகாதார ஆய்வாளாகள்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலார்கள்‌ கலந்து கொண்டனர்‌.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...