கோவை வடவள்ளி அருகே மூதாட்டியிடம் 4 சவரன் நகை பறிப்பு - பெண் உட்பட இருவர் கைது

வடவள்ளி சின்னமா நகரில் கோவிலுக்கு நடந்து சென்ற மூதாட்டி கழுத்தில் இருந்த 4 சவரன் நகையை பறித்துச் சென்ற பெண் உட்பட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.


கோவை: கோவை வடவள்ளி இடையர்பாளையம் சாலை, சின்னமா நகரை சேர்ந்தவர் மாலதி (62). இவர் கடந்த 4 ஆம் தேதி வீட்டுக்கு அருகே உள்ள கோவிலுக்கு நடந்து சென்றுள்ளார்.

அப்போது அவ்வழியாக ஹோண்டா டியோ வாகனத்தில் ஒரு பெண்ணும் ஆணும் பின் தொடர்ந்து வந்துள்ளனர். இந்நிலையில், மாலதியின் அருகில் சென்ற அவர்கள் மாலதி அணிந்திருந்த 4 சவரன் தாலி சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.

இந்நிலையில் செயின் பறிப்பு சம்பவம் தொடர்பாக மூதாட்டி மாலதி, வடவள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

அப்பகுதியில் இருந்த 20 க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சி பதிவுகளை ஆய்வு செய்து, போலீசார் மேற்கொண்ட விசாரணையில், செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டது, ஆவாரம்பாளையத்தை சேர்ந்த மகேஸ்வரி (45), புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த கார்த்திக் (24) ஆகியோர் என்பது தெரியவந்தது.

இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

சாலையில் நடந்து சென்ற மூதாட்டியிடம் செயின் பறிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...