மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தொடர் மழை - தொடர்ந்து உயரும் சிறுவாணி அணையின் நீர்மட்டம்

சிறுவாணி அணையின் நீர்பிடிப்பு பகுதியான மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர் மழை காரணமாக அணையின் நீர் மட்டம் 39.15 அடியாக உயர்ந்துள்ளது என்றும், விரைவில் 42 அடியை தொடும் என தகவல்.


கோவை: கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக சிறுவாணி அணை விளங்கி வருகிறது. சிறுவாணி அணையின் மொத்த கொள்ளளவு 49.5 அடியாக உள்ளது.

ஆனால் சிறுவாணி அணையில் 45 அடி வரை மட்டுமே நீரை தேக்க வேண்டும் கேரளா நீர் வளத்துறை அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில், கடந்த தென் மேற்கு பருவ மழையின்போது இரண்டு முறை சிறுவாணி அணையின் நீர் மட்டம் 46 அடி வரை சென்றது.

அதன் பிறகு மழையளவு குறைந்த நிலையில் நீர் மட்டம் சரியத் துவங்கியது. இந்நிலையில் தற்போது வட கிழக்கு பருவமழை துவங்கியதால் சிறுவாணி நீர் பிடிப்பு பகுதியில் மீண்டும் மழை பெய்ய துவங்கி உள்ளது.

சிறுவாணி அணையின் நீர் பிடிப்பு பகுதியான மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் நேற்றிரவு 25 மி.மீ மழையும் மற்றும் அடிவாரத்தில் 21 மிமீ மழையும் பதிவானது. இதனால் மீண்டும் சிறுவாணி அணையின் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது.

தற்போது நீர் மட்டம் 39.15அடியாக உயர்ந்துள்ளது, தொடர்ந்து அங்கு மழை பெய்து வருவதால் இரண்டு நாட்களில் 42 அடியை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...

கோவையில் இரவு பெய்த கனமழை; மழைநீர் தேங்கி பொதுமக்கள் அவதி

வானிலை ஆய்வு மையம் எச்சரித்தபடி கோவையில் நேற்று மாலை கனமழை பெய்தது. உக்கடம், ரயில் நிலையம், காந்தி பார்க் உள்ளிட்ட பகுதி...

வெள்ளியங்கிரியில் யானை துரத்தியதில் இருசக்கர வாகன ஓட்டுநர் படுகாயம்

வெள்ளியங்கிரி அடிவாரத்தில் முள்ளங்காடு செக் போஸ்ட் அருகே இன்று அதிகாலை யானை துரத்தியதில் டீ வியாபாரி ஆறுச்சாமி இருசக்கர...