இலவச வீட்டு மனை வழங்க வலியுறுத்தி நரிக்குறவர் இன மக்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு

சுண்டக்காமுத்தூர் பகுதியை சேர்ந்த நரிக்குறவர் இனமக்கள் தங்களுக்கு அரசின் இலவச மனை வழங்கும் திட்டத்தின் மனை வழங்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.



கோவை: கோவை சுண்டக்காமுத்தூர் பகுதியை சேர்ந்த நரிகுறவர் இன மக்கள் தங்களுக்கு இலவச வீட்டு மனை வழங்க கோரி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.



இதுதொடர்பாக நரிக்குறவர் இன மக்கள் அளித்த மனுவில், 35 ஆண்டுகளாக சுண்டக்காமுத்தூர் எம்ஜிஆர் தோட்டம் பகுதியில் உள்ள கோயிலுக்கு சொந்தமான இடத்தில் வசித்து வருகிறோம். மழைக்காலங்களில் இங்கு இருப்பது மிகவும் சிரமமாக இருக்கிறது.

மேலும் அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் வசித்தால் தங்களுக்கும் அங்குள்ளவர்களுக்கும் இடையூறாக இருக்குமென்பதால் தங்களுக்கு தனி மனை இடம் ஒதுக்கித் தர வேண்டும்.



சுமார் 35 குடும்பங்கள் மனை இன்றி வாழ்ந்து வருவதால் தமிழ்நாடு அரசு வழங்கும் இலவச மனை வழங்கும் திட்டத்தின் கீழ் தங்களுக்கும் இலவச மனை ஒதுக்கி தர வேண்டும்.



இவ்வாறு அந்த கோரிக்கை மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...