கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் உடனடியாக மின் மயானம் அமைக்க வேண்டும் - ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு

ஒத்தக்கால் மண்டபம் பகுதியில் அமைக்கப்பட உள்ள மின் மயானத்தை உடனடியாக அமைக்க வலியுறுத்தி 300க்கும் மேற்பட்ட மக்கள், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.



கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி சாலை ஒத்தக்கால் மண்டபம் பேரூராட்சியில் மின் மயானம் அமைக்கப்பட உள்ளதாக தமிழக அரசு சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.



இந்நிலையில், தமிழக அரசு அறிவித்த மின் மயானத்தை உடனடியாக ஒத்தக்கால் மண்டபம் பகுதியில் அமைக்க வலியுறுத்தி ஒத்தக்கால் மண்டபம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான பிரிமியர் மில்ஸ் மற்றும் ஒக்கிலிப்பாளையம் பகுதிகளை சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தனர்.



மனு அளிக்க வந்த மக்கள், தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பதாகைகளை ஏந்தி ஆட்சியர் அலுவலகம் முன்பு முழக்கங்களையும் எழுப்பினர்.



இது குறித்து பேசிய அப்பகுதி மக்கள் அப்பகுதியில் மின் மயானம் வேண்டும் என்பது தங்களது பல நாள் கோரிக்கைகளாக உள்ளது. தற்போது இதனை உடனடியாக அமைத்து தர வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், மின் மயானம் அமைய உள்ள அந்த குறிப்பிட்ட இடத்தை சுற்றியுள்ள மக்கள் அந்த இடத்தில் மயானம் அமைக்க கூடாது என வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...

கோவையில் இரவு பெய்த கனமழை; மழைநீர் தேங்கி பொதுமக்கள் அவதி

வானிலை ஆய்வு மையம் எச்சரித்தபடி கோவையில் நேற்று மாலை கனமழை பெய்தது. உக்கடம், ரயில் நிலையம், காந்தி பார்க் உள்ளிட்ட பகுதி...

வெள்ளியங்கிரியில் யானை துரத்தியதில் இருசக்கர வாகன ஓட்டுநர் படுகாயம்

வெள்ளியங்கிரி அடிவாரத்தில் முள்ளங்காடு செக் போஸ்ட் அருகே இன்று அதிகாலை யானை துரத்தியதில் டீ வியாபாரி ஆறுச்சாமி இருசக்கர...

12,522 மெட்ரிக் டன் உர இருப்பு கோவையில்; முறைகேடு செய்தால் உரிமம் ரத்து

கோவை மாவட்டத்தில் வரவிருக்கும் கோடைப்பயிர் சாகுபடிக்காக 12,522 மெட்ரிக் டன் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக வேளாண்மை...

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...