கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் உடனடியாக மின் மயானம் அமைக்க வேண்டும் - ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு

ஒத்தக்கால் மண்டபம் பகுதியில் அமைக்கப்பட உள்ள மின் மயானத்தை உடனடியாக அமைக்க வலியுறுத்தி 300க்கும் மேற்பட்ட மக்கள், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.



கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி சாலை ஒத்தக்கால் மண்டபம் பேரூராட்சியில் மின் மயானம் அமைக்கப்பட உள்ளதாக தமிழக அரசு சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.



இந்நிலையில், தமிழக அரசு அறிவித்த மின் மயானத்தை உடனடியாக ஒத்தக்கால் மண்டபம் பகுதியில் அமைக்க வலியுறுத்தி ஒத்தக்கால் மண்டபம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான பிரிமியர் மில்ஸ் மற்றும் ஒக்கிலிப்பாளையம் பகுதிகளை சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தனர்.



மனு அளிக்க வந்த மக்கள், தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பதாகைகளை ஏந்தி ஆட்சியர் அலுவலகம் முன்பு முழக்கங்களையும் எழுப்பினர்.



இது குறித்து பேசிய அப்பகுதி மக்கள் அப்பகுதியில் மின் மயானம் வேண்டும் என்பது தங்களது பல நாள் கோரிக்கைகளாக உள்ளது. தற்போது இதனை உடனடியாக அமைத்து தர வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், மின் மயானம் அமைய உள்ள அந்த குறிப்பிட்ட இடத்தை சுற்றியுள்ள மக்கள் அந்த இடத்தில் மயானம் அமைக்க கூடாது என வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை காவல்துறை கான்ஸ்டபிள் மாநில போட்டியில் தங்கத்துக்குப் பின் வெண்கலம் வென்றார்

கோவை நகர காவல்துறை வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் அகற்றும் படையைச் சேர்ந்த காவல் கான்ஸ்டபிள் M. விஜய், செப்டம்பர் 10ஆம் தே...

Coimbatore Police Constable Adds Bronze After Gold at State-Level Competition

Police Constable M. Vijay of the Coimbatore City Police Bomb Detection and Disposal Squad (BDDS), who won gold in the Ro...

வால்பாறையில் தியாகி இமானுவேல் சேகரனாரின் 69-வது குருபூஜை; அனைத்துக் கட்சியினரும் மலரஞ்சலி

வால்பாறையில் சுதந்திரப் போராட்டத் தியாகி இமானுவேல் சேகரனாரின் 69-வது குருபூஜை விழா கோலாகலமாக நடைபெற்றது. அனைத்துக் கட்சி...

கோவையில் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து அமைச்சர் வே சம்பத்குமார் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நடைபெற்று வரும் சாலை பணிகள், நமக்கு நாமே திட்டம், அம்ருத் திட்டப் பணிகள் ஆகியவற்றை பிற்படுத...

கோவையில் விபத்தில் மூளைச்சாவடைந்த நபரின் உறுப்புகள் தானம்: 3 பேருக்கு மறுவாழ்வு

கோவையில் துடியலூர் அருகே இருசக்கர வாகன விபத்தில் மூளைச்சாவடைந்த 51 வயது நபரின் கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் அவரது குடு...

கோவையில் திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026 நடைமுறைப்படுத்தல் குறித்த கலந்தாய்வுக் கூட்டம்

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தலைமையில் திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026 நடைமுறைப்படுத்தல் குறித்த கலந்தாய்வுக்...