குன்னூர் அருகே கனமழையால் ஆதிவாசி கிராமத்திற்கு செல்லும் சாலையில் 5-க்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது

நீலகிரி மாவட்டம் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக கிராமப்புற சாலைகளில் ஆங்காங்கே மரங்கள் விழுவதும் மண் சரிவு ஏற்படுவதுமாக உள்ளது. மண் சரிவை அகற்றி சீரமைக்கும் பணியில் ஊராட்சி நிர்வாகம் மற்றும் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.



நீலகிரி: வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் சில மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

மேலும் 24மணி நேரம் தொடர்ச்சியாக மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையின் தாக்கம் பரவலாக உள்ளது. குறிப்பாக குன்னூர் மற்றும் கோத்தகிரி பகுதிகளில் மழையின் தாக்கம் தொடர்ந்து இருந்து வரும் நிலையில் குன்னூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக கிராமப்புற சாலைகளில் ஆங்காங்கே மரங்கள் விழுவதும் மண் சரிவு ஏற்படுவதுமாக உள்ளது.

அவற்றை மாவட்ட நிர்வாகம் சார்பாக உடனடியாக மீட்டு வரும் நிலையில் பணியில் ஈடுபட்டுள்ளது.



இந்நிலையில் குன்னூரில் இருந்து ஆனைபள்ளம் ஆதிவாசி கிராமத்திற்கு செல்லும் சாலையில் 5-க்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. இதனால் ஆதிவாசி மக்கள் சென்று வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இத்தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற உலிக்கல் பேரூராட்சி தலைவர், துணைத்தலைவர் மற்றும் அதிகாரிகள் Jcp உதவியுடன் சாலையை சீரமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...