கோவை சுந்தராபுரம் அருகே அடுத்தடுத்து 3 செல்போன் கடைகளின் பூட்டை உடைத்து கொள்ளை - நள்ளிரவில் மர்ம நபர் கைவரிசை

சுந்தராபுரம் அருகே அடுத்தடுத்து 3 செல்போன் கடைகளின் பூட்டை உடைத்து பல லட்சம் மதிப்பிலான செல்போன்கள் கொள்ளையடிக்கப்பட்ட நிலையில், சிசிடிவி காட்சிகள் உதவியுடன் போலீசார் கொள்ளையனை தேடி வருகின்றனர்.



கோவை: கோவை மாவட்டம், சுந்தராபுரம் பகுதியை சேர்ந்தவர் புண்ணியகோடி. இவருக்குசாரதா மில் சாலையில் செல்போன் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது.இந்நிலையில், நேற்று வழக்கம் போல கடையை பூட்டிவிட்டு சென்றுள்ளார்.

இந்த நிலையில், இன்று காலை மீண்டும் கடைக்கு வந்துள்ளார். அப்போது, கடையின் பூட்டு உடைந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.இதையடுத்து உள்ளே சென்று பார்த்த போது கடையில் இருந்த சுமார் 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான செல்போன்கள்கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

இந்நிலையில்,கடையில் பொருத்தப்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது சுமார் 12 மணியளவில் உள்ளே புகுந்த மர்ம நபர் ஒருவர் அங்கிருந்த செல்போன்களை திருடும் காட்சிகள் பதிவாகியிருந்தது.



இதையடுத்து கடை உரிமையாளர் புண்ணியகோடி, சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளுடன் போத்தனூர் காவல்நிலையத்தில் இச்சம்பவம் தொடர்பாக புகார் அளித்தார்.

புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், கைரேகை நிபுணர்களுடன் வந்த போலீசார் அங்கு பதிவான தடயங்களை சேகரித்தனர்.

இதனிடையே புண்ணியக்கோடி கடை மட்டுமின்றி அடுத்தடுத்து 2 செல்போன் கடைகள் பூட்டையும் உடைத்து மர்ம திருடிச் சென்றதும் தெரியவந்தது.

அடுத்தடுத்து நடைபெற்ற இந்த கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...

தேக்கம்பட்டியில் மீண்டும் கோயில் யானைகள் புத்துணர்வு முகாம்: முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்த அதிகாரிகள்

தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் மீண்டும் நடைபெறவுள்ள கோயில் யானைகள் புத்துணர்வு முகாமை முன்னிட்டு, இந்து சமய அறநிலையத்த...

கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு முதியவர் தர்ணா; அரசு மருத்துவமனை குறித்து புகார்

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தின்போது, அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கப்படவ...

ஜூன் இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு சாய்பாபா காலனி மேம்பாலம் திறக்கப்படும்: அமைச்சர் சம்பத்குமார்

கோவையில் ரூ.71 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை அமைச்சர் வி. சம்பத்குமார் ஆய்வு செ...

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ரேஷன் அரிசி கடத்தல்..? 50 மூட்டைகளுடன் சிக்கிய மினி லாரி.

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ரேஷன் அரிசி கடத்தப்பட்டதாக கிடைத்த தகவலின் பேரில் மினி லாரி ஒன்று மடக்கிப் பிடிக்கப்பட்ட...