தேக்கம்பட்டியில் மீண்டும் கோயில் யானைகள் புத்துணர்வு முகாம்: முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்த அதிகாரிகள்

தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் மீண்டும் நடைபெறவுள்ள கோயில் யானைகள் புத்துணர்வு முகாமை முன்னிட்டு, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் முகாம் நடைபெறும் பகுதிகளில் முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்தனர்.


கோவை: தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் மீண்டும் நடைபெறவுள்ள கோயில் யானைகளுக்கான புத்துணர்வு நல்வாழ்வு முகாமை முன்னிட்டு, அதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

தமிழகத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை மற்றும் ஆதீனங்களுக்கு சொந்தமான கோயில் யானைகளுக்காக கடந்த அ.தி.மு.க. ஆட்சி காலங்களில் புத்துணர்வு நல்வாழ்வு முகாம் நடத்தப்பட்டு வந்தது. இடையில் சில ஆண்டுகள் நிறுத்தப்பட்ட நிலையில், தற்போதைய ஆட்சியில் மீண்டும் முகாமை நடத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.



இதனையடுத்து, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ரமேஷ்குமார் தலைமையிலான அதிகாரிகள் தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் முகாம் நடைபெறும் இடங்களை ஆய்வு செய்தனர். அப்போது, யானைகள் கட்டி வைக்கப்படும் பகுதிகள், பாகன்கள் தங்கும் அறைகள், உணவுக்கூடம், தீவனங்கள் சேமிக்கும் அறைகள், பவானி ஆற்றில் யானைகள் குளிக்கும் இடங்கள், நடைப்பயிற்சி மேற்கொள்ளும் பகுதிகள் மற்றும் ஷவர் குளியல் வசதிகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.



மேலும், வனத்துறையினரின் உதவியுடன் வனவிலங்குகள் முகாமிற்குள் நுழையாத வகையில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. சோலார் மின்வேலி அமைப்பது, கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்க ஏற்ற இடங்களைத் தேர்வு செய்வது உள்ளிட்ட விஷயங்கள் குறித்தும் வனத்துறை அதிகாரிகளிடம் விவரங்கள் பெறப்பட்டன.

இந்த ஆய்வின்போது வனபத்ரகாளியம்மன் கோயில் துணை ஆணையரும் செயல் அலுவலருமான சரவணன் (கூடுதல் பொறுப்பு), கோவை கோட்ட பொறியாளர் ரேவதி, உதவி கோட்ட பொறியாளர் மாணிக்கவேல், கண்காணிப்பாளர்கள் சந்திரசேகரன், தனராஜ் மற்றும் மேட்டுப்பாளையம் சரக ஆய்வர் ஹேமலதா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.



கடைசியாக, 2021-ஆம் ஆண்டு தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் கோயில் யானைகளுக்கான புத்துணர்வு முகாம் நடைபெற்றது. இதுவரை முதுமலை தெப்பக்காட்டில் இரண்டு முறையும், தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் 11 முறையும் என மொத்தம் 13 முறை யானைகள் புத்துணர்வு முகாம் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...