மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு தமிழ்நாடு அரசின் மாநில விருதுகள் வழங்கப்படவுள்ள நிலையில், விண்ணப்பங்கள் ஜூன் 25-க்குள் வரவேற்கப்படுகின்றன.


Coimbatore: மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக சேவையாற்றிய தனிநபர்கள், நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளை கௌரவிக்கும் வகையில் தமிழ்நாடு அரசின் மாநில விருதுகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் பவன்குமார் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் தொண்டு நிறுவனங்கள், சமூகப்பணியாளர்கள், மருத்துவர்கள், தனியார் நிறுவனங்கள் உள்ளிட்டோர் இந்த விருதுகளுக்கு நேரடியாக விண்ணப்பிக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார். தேர்வுக்குழு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு, மாண்புமிகு தமிழக முதலமைச்சரால் மாநில விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படவுள்ளனர்.

தனிநபர் பிரிவில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக தொண்டாற்றியவர்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த தொண்டு நிறுவனத்திற்கும் 10 கிராம் தங்கப் பதக்கம், ரூ.50,000 ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படவுள்ளது.

மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பான சேவை வழங்கிய சிறந்த மருத்துவர், அதிகளவில் வேலைவாய்ப்பு வழங்கிய தனியார் நிறுவனம், சிறந்த சமூகப்பணியாளர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகளவில் கடன் வழங்கிய மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஆகியோருக்கும் 10 கிராம் தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன.

மாநில விருதுகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் மற்றும் நிறுவனங்கள் www.awards.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் வரும் ஜூன் 25, 2026-க்குள் நேரடியாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தின் இரண்டு நகல்களை ஜூன் 25 மாலை 5 மணிக்குள் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் ஒப்படைக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு கோவைமாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை 0422-2380381 அல்லது 94999 33471 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...

தேக்கம்பட்டியில் மீண்டும் கோயில் யானைகள் புத்துணர்வு முகாம்: முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்த அதிகாரிகள்

தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் மீண்டும் நடைபெறவுள்ள கோயில் யானைகள் புத்துணர்வு முகாமை முன்னிட்டு, இந்து சமய அறநிலையத்த...

கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு முதியவர் தர்ணா; அரசு மருத்துவமனை குறித்து புகார்

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தின்போது, அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கப்படவ...