கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்தத்தை ரத்து செய்து, மாநகராட்சியின் நேரடி நிர்வாகத்தின் கீழ் கொண்டு வர வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (DYFI) வலியுறுத்தியுள்ளது.
கோவை: கோவை மாநகராட்சியின் முத்தண்ணன்குளம் பகுதியில் இளைஞர்களின் விளையாட்டு வளர்ச்சிக்காக ரூ.60 லட்சம் மதிப்பில் Turf மைதானம் அமைக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களின் வரிப்பணத்தில் உருவாக்கப்பட்டு,இளைஞர்களின் பயன்பாட்டிற்காக செயல்பட வேண்டிய மைதானம், தற்போது "KOVAI ADDA" என்ற தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டு வணிக நோக்கில் இயக்கப்பட்டு வருவதாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (DYFI) குற்றம்சாட்டியுள்ளது.
இது குறித்து கண்டனம் அறிக்கை வெளியிட்டுள்ள, DYFI கோவை மாவட்டத் தலைவர் ஏ.என். ராஜா மற்றும் மாவட்டச் செயலாளர் எம். தினேஷ் ராஜா, இந்த Turf மைதானத்தில் திங்கள் முதல் வெள்ளி வரை ஒரு மணி நேரத்திற்கு ரூ.1,000 மற்றும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ஒரு மணி நேரத்திற்கு ரூ.1,200 வரை கட்டணம் வசூலிக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக ஏழை, எளிய மற்றும் நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்கள் மைதானத்தை பயன்படுத்த முடியாத நிலை உருவாகியுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளனர்.
இளைஞர்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்தவும், ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்கவும் மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்ட மைதானம், தற்போது தனியார் நிறுவனத்தின் லாபம் ஈட்டும் கருவியாக மாற்றப்பட்டிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று கண்டனம் தெரிவித்தனர்.

எனவே, கோவை மாநகராட்சி அந்த தனியார் நிறுவனத்துடன் செய்துள்ள ஒப்பந்தத்தை உடனடியாக ரத்து செய்து, Turf மைதானத்தை தனது நேரடி நிர்வாகத்தின் கீழ் கொண்டு வர வேண்டும் என DYFI கோரிக்கை விடுத்துள்ளது. மேலும், அனைத்து தரப்பு இளைஞர்களும் பயன்படுத்தும் வகையில் குறைந்த கட்டணத்தில் அல்லது குறிப்பிட்ட நேரங்களில் இலவசமாக பயன்படுத்தும் வசதியை ஏற்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
இந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத பட்சத்தில், மக்கள் பணத்தில் உருவாக்கப்பட்ட பொதுச் சொத்தை தனியாரின் லாப நோக்கிலிருந்து மீட்டெடுக்க இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் நேரடி போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்றுஅறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
பொதுமக்களின் வரிப்பணத்தில் உருவாக்கப்பட்டு,இளைஞர்களின் பயன்பாட்டிற்காக செயல்பட வேண்டிய மைதானம், தற்போது "KOVAI ADDA" என்ற தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டு வணிக நோக்கில் இயக்கப்பட்டு வருவதாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (DYFI) குற்றம்சாட்டியுள்ளது.
இது குறித்து கண்டனம் அறிக்கை வெளியிட்டுள்ள, DYFI கோவை மாவட்டத் தலைவர் ஏ.என். ராஜா மற்றும் மாவட்டச் செயலாளர் எம். தினேஷ் ராஜா, இந்த Turf மைதானத்தில் திங்கள் முதல் வெள்ளி வரை ஒரு மணி நேரத்திற்கு ரூ.1,000 மற்றும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ஒரு மணி நேரத்திற்கு ரூ.1,200 வரை கட்டணம் வசூலிக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக ஏழை, எளிய மற்றும் நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்கள் மைதானத்தை பயன்படுத்த முடியாத நிலை உருவாகியுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளனர்.
இளைஞர்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்தவும், ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்கவும் மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்ட மைதானம், தற்போது தனியார் நிறுவனத்தின் லாபம் ஈட்டும் கருவியாக மாற்றப்பட்டிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று கண்டனம் தெரிவித்தனர்.
எனவே, கோவை மாநகராட்சி அந்த தனியார் நிறுவனத்துடன் செய்துள்ள ஒப்பந்தத்தை உடனடியாக ரத்து செய்து, Turf மைதானத்தை தனது நேரடி நிர்வாகத்தின் கீழ் கொண்டு வர வேண்டும் என DYFI கோரிக்கை விடுத்துள்ளது. மேலும், அனைத்து தரப்பு இளைஞர்களும் பயன்படுத்தும் வகையில் குறைந்த கட்டணத்தில் அல்லது குறிப்பிட்ட நேரங்களில் இலவசமாக பயன்படுத்தும் வசதியை ஏற்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
இந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத பட்சத்தில், மக்கள் பணத்தில் உருவாக்கப்பட்ட பொதுச் சொத்தை தனியாரின் லாப நோக்கிலிருந்து மீட்டெடுக்க இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் நேரடி போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்றுஅறிக்கையில் தெரிவித்துள்ளனர்.