கோத்தகிரி அருகே கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து சாலையோர மண் திட்டில் மோதி பயங்கர விபத்து - 20 பேர் படுகாயம்

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் இருந்து குன்னூருக்கு சென்ற அரசு பேருந்து திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மண் திட்டில் மோதிய விபத்தில், 20 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை.



நீலகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரியிலிருந்து இன்று காலை குன்னூருக்கு அரசு பேருந்து ஒன்றி பயணிகளை ஏற்றிக் கொண்டு புறப்பட்டு சென்றது.



இந்நிலையில், பேருந்து கோத்தகிரியில் உள்ள கே.பி.எஸ் கல்லூரி அருகே சென்ற போது பேருந்தில் பிரேக் பிடிக்காமல் ஒட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த எதிரே வந்த இரு சக்கர வாகனத்தின் மீது மோதியவாறு சாலை ஓரத்தில் உள்ள மண் திட்டில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் பைக்கில் வந்த மகேந்திரன் என்பவர் பலத்த காயமடைந்த நிலையில் அரசு பேருந்தில் பயணம் செய்த ஒட்டுநர் உட்பட 19க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

இந்நிலையில் விபத்தில் படுகாயமடந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு கோத்தகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட மருத்துவர்கள் நிலையில் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதனிடையே பேருந்தை இயக்கிய ஒட்டுநர் ரகுராதன் மற்றும் இரு சக்கர வாகனத்தில் வந்த மகேந்திரன் ஆகியோர் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.



சம்பவம் குறித்து கோத்தகிரி போலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் காலாவதியான அரசு பேருந்தை இயக்கியதே விபத்துக்கு காரணம் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...