செகுடந்தாளி முருகேசன் நினைவு நாள்: கோவை கருமத்தம்பட்டியில் மதுபான கடைகளுக்கு நாளை விடுமுறை - தமிழ்நாடு வாணிப கழகம்

சாதி ஒழிப்பு போராளி செகுடந்தாளி முருகேசன் நினைவு நாளையொட்டி நாளைய தினம் (17.11.2022) கருமத்தம்பட்டி பகுதியில் மதுபான கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாகவும், மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிப்பு.



கோவை: கோவை மாவட்டம் சோமனூர் அடுத்த செகுடந்தாளி பகுதியை சேர்ந்தவர் சாதி ஒழிப்பு போராளி முருகேசன். அவர் கடந்த 1999ஆம் ஆண்டு நவம்பர் 17ம் தேதி கொலை செய்யப்பட்டார்.

இதனையடுத்து ஆண்டுதோறும் நவம்பர் 17ஆம் தேதி அவருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் அவரது நினைவு நாளையொட்டி அன்று ஒரு நாள் அப்பகுதியில் செயல்படும் மதுபான கடைகள் மதுபான கூடங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.

அதன்படி செகுடந்தாளி முருகேசன் நினைவு நாளையொட்டி நாளைய தினம்(17.11.2022) கருமத்தம்பட்டி பகுதியில் செயல்படும் மதுபான கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழ்நாடு மாநில வாணிப கழகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து கோவை தெற்கு மாவட்ட தமிழ்நாடு மாநில வாணிப கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,

செகுடந்தாளி முருகேசன் நினைவு நாள் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி காரணமாக கருமத்தம்பட்டி பகுதியில் செயல்படும் அரசு மதுபான சில்லறை விற்பனை கடைகள் 2261, 2270, 1975, 2306, 1821, 1736, 2272 மற்றும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்களுக்கு ஒரு நாள் (17.11.2022) விடுமுறை அளிக்கப்படுகிறது.

உத்தரவை மீறி செயல்படும் கடை, பணியாளர்கள் மற்றும் மதுக்கூட உரிமதாரர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு வாணிப கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் ஜூலை 7 (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மேயர் கா. ரங்கநாயகி ரா...

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...