செகுடந்தாளி முருகேசன் நினைவு நாள்: கோவை கருமத்தம்பட்டியில் மதுபான கடைகளுக்கு நாளை விடுமுறை - தமிழ்நாடு வாணிப கழகம்

சாதி ஒழிப்பு போராளி செகுடந்தாளி முருகேசன் நினைவு நாளையொட்டி நாளைய தினம் (17.11.2022) கருமத்தம்பட்டி பகுதியில் மதுபான கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாகவும், மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிப்பு.



கோவை: கோவை மாவட்டம் சோமனூர் அடுத்த செகுடந்தாளி பகுதியை சேர்ந்தவர் சாதி ஒழிப்பு போராளி முருகேசன். அவர் கடந்த 1999ஆம் ஆண்டு நவம்பர் 17ம் தேதி கொலை செய்யப்பட்டார்.

இதனையடுத்து ஆண்டுதோறும் நவம்பர் 17ஆம் தேதி அவருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் அவரது நினைவு நாளையொட்டி அன்று ஒரு நாள் அப்பகுதியில் செயல்படும் மதுபான கடைகள் மதுபான கூடங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.

அதன்படி செகுடந்தாளி முருகேசன் நினைவு நாளையொட்டி நாளைய தினம்(17.11.2022) கருமத்தம்பட்டி பகுதியில் செயல்படும் மதுபான கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழ்நாடு மாநில வாணிப கழகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து கோவை தெற்கு மாவட்ட தமிழ்நாடு மாநில வாணிப கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,

செகுடந்தாளி முருகேசன் நினைவு நாள் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி காரணமாக கருமத்தம்பட்டி பகுதியில் செயல்படும் அரசு மதுபான சில்லறை விற்பனை கடைகள் 2261, 2270, 1975, 2306, 1821, 1736, 2272 மற்றும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்களுக்கு ஒரு நாள் (17.11.2022) விடுமுறை அளிக்கப்படுகிறது.

உத்தரவை மீறி செயல்படும் கடை, பணியாளர்கள் மற்றும் மதுக்கூட உரிமதாரர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு வாணிப கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...