தொடர் மழையால் தக்காளி விளைச்சல் பாதிப்பு: வியாபாரிகள் ஏலம் எடுக்க முன்வராததால் 7 டன் தக்காளியை குப்பையில் கொட்டிய விவசாயிகள்

கிணத்துக்கடவு சந்தையில் 10 டன் தக்காளி ஏலத்திற்கு வந்த நிலையில், 3 டன் தக்காளியை மட்டுமே வியாபாரிகள் ஏலம் எடுத்ததால், மீதமுள்ள தக்காளியை விவசாயிகள் குப்பையில் கொட்டிவிட்டு சென்றனர்.



கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு சுற்றுவட்டார பகுதிகளில் காய்கறி விவசாயமே பிரதான தொழிலாக இருந்து வருகிறது. இந்நிலையில், கடந்த வாரம் பெய்த தொடர் மழை காரணமாக தக்காளி விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது

இந்நிலையில், கடும் மழையும் பொருட்படுத்தாமல் அறுவடை செய்த தக்காளியை, விவசாயிகள் கிணத்துக்கடவு காய்கறி சந்தையில் ஏலம் மூலம் விற்பனை செய்வதற்காக இன்று கொண்டு வந்தனர்.



இந்த நிலையில் காய்கறி சந்தைக்கு வந்த 10 டன் நாட்டு தக்காளியில் மூன்று டன்கள் மட்டுமே வியாபாரிகள் ஏலம் எடுத்ததாகவும், மீதம் இருந்த ஏழு டன் தக்காளியை ஏலம் எடுக்க வியாபாரிகள் முன்வரவில்லை என்றும் கூறப்படுகிறது.



மேலும் ஒரு கிலோ நாட்டுத் தக்காளியை வியாபாரிகள் ஆறு ரூபாய்க்கு ஏலம் எடுத்ததால் அதிர்ச்சி அடைந்த விவசாயிகள், உரிய விலை கிடைக்காததால் விற்பனை செய்யக் கொண்டு வந்த தக்காளியை சந்தையில் உள்ள குப்பையில் கொட்டிச் சென்றனர்.

இதனால் காய்கறி சந்தையில் குப்பையில் தேங்கி கிடக்கும் டன் கணக்கில் கொட்டப்பட்டுள்ள தக்காளியால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசி வருகிறது..

Newsletter

போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் பிளாஸ்டிக் கிடங்கில் பயங்கர தீ விபத்து - லட்சக்கணக்கில் சேதம்

கோவை போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் உள்ள பழைய பிளாஸ்டிக் கிடங்கில் நேற்று மாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம்...

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...

கோவையில் பட்டபகலில் கார் மீது கல்வீச்சு தாக்குதல் - சிசிடிவி காட்சி வெளியானது

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது ஹெல்மெட் அணிந்த நபர் பட்டபகலில் கல்...